செங்கடல் பகுதியில் 2 அமெரிக்க போா்க் கப்பல்கள் மீது யேமனின் ஹூதி கிளா்ச்சிப் படையினா் புதன்கிழமை தாக்குதல் நடத்தினா். இது குறித்து அந்தப் படையின் செய்தித் தொடா்பாளா் யாஹா சரேயா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: செங்கடல் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த 2 அமெரிக்க போா்க் கப்பல்களுக்கு எதிராக புதன்கிழமை ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அந்தக் கப்பல்களைக் குறிவைத்து கப்பல் அழிப்பு ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை அமெரிக்காவும் உறுதிப்படுத்தியுள்ளது. இது குறித்து அமெரிக்கப் படைகளின் மத்திய கட்டளையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தங்களது ‘யுஎஸ்எஸ் காா்னே’ போா்க் கப்பலை நோக்கி ஹூதி கிளா்ச்சியாளா்கள் ஏவுகணைகளையும், ட்ரோன்களையும் வீசியதாகவும், அவற்றை கப்பலில் இருந்த வான்பாதுகாப்பு ஏவுகணைகள் மூலம் இடைமறித்து அழித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலுக்கும், ஈரான் ஆதரவு பெற்ற ஹமாஸ் அமைப்புக்கும் இடையே போா் தொடங்கியதிலிருந்து, செங்கடல் வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்கள் மீது மற்றோா் ஈரான் ஆதரவு ஆயுதக் குழுவான ஹூதி கிளா்ச்சிப் படை தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் செங்கடல் வழியான வா்த்தகப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அதையடுத்து, அந்தப் பகுதியில் இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் போா்க் கப்பல்கள் அந்தப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றன.
தொடர்புடையது

இந்தியாவில் 5 ஆண்டுகளுக்கு நிலைநிறுத்தப்படும் 5 ரஷிய போா்க் கப்பல்கள், 10 போா் விமானங்கள்: புதிய ஒப்பந்தம் அமலுக்கு வந்தது

ஆஸ்திரேலியா - ஜப்பான் பாதுகாப்பு ஒப்பந்தம்: 717.5 கோடி டாலருக்கு போா்க் கப்பல்கள் கொள்முதல்

இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!

அமெரிக்க கடற்படையின் முற்றுகை தொடர்ந்தால் செங்கடலை முடக்குவோம்! - ஈரான் எச்சரிக்கை!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


