உக்ரைன் மீது ஏவுகணை தாக்குதல்: ரஷிய தேர்தல் காரணமா?

ஒடேசாவில் ரஷிய தாக்குதல்: குறைந்தது 14 பேர் பலி, 46 பேர் காயம்
ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்ட பகுதியில் உக்ரைன் மீட்பு வீரர்கள்
ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்ட பகுதியில் உக்ரைன் மீட்பு வீரர்கள் UES/ AP
Published on
Updated on
1 min read

தெற்கு உக்ரைன் நகரமான ஒடேசாவில் வெள்ளிக்கிழமை ரஷியா நடத்திய தாக்குதலில் குறைந்தது 14 பேர் பலியாகியுள்ளதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முதல் ஏவுகணை அங்குள்ள வீடுகள் மீது ஏவப்பட்டது. அங்கு மீட்புப் படை வீரர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் வந்தவுடன் இரண்டாவது ஏவுகணையை ரஷியா ஏவியுள்ளது.

இந்த தாக்குதல் ரஷியாவில் தேர்தல் தொடங்கியுள்ள நிலையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதிர்ச்சியில் உக்ரைன் மீட்பு வீரர்
அதிர்ச்சியில் உக்ரைன் மீட்பு வீரர்UES/ AP

துறைமுக நகரமான ஒடேசாவில் ரஷியா மேற்கொண்டுள்ள ஏவுகணை தாக்குதல்களால் 46 பேர் காயமுற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஒடேசா பகுதியில் உள்ள 10 வீடுகள் மற்றும் அத்தியாவசிய மீட்பு கருவிகள் சேதமடைந்துள்ளன.

ரஷிய தாக்குதலில் காயமுற்றவருக்கு சிகிச்சை அளிக்கும் சக வீரர்கள்
ரஷிய தாக்குதலில் காயமுற்றவருக்கு சிகிச்சை அளிக்கும் சக வீரர்கள்UES/ AP

ஒரே இடத்தில் இரண்டாவது முறை தாக்குதல் நடத்துவதை ‘டபுள் டேப்’ தந்திரம் என ராணுவத்தில் குறிப்பிடுவர்.

கடந்த 2 வாரத்தில் இது இரண்டாவது தாக்குதல். முன்னதாக மார்ச் 2 அன்று ரஷிய டிரோன் அடுக்கு மாடிக் குடியிருப்பைத் தாக்கியதில் 5 குழந்தைகள் உள்பட 12 பேர் பலியாகினர்.

உக்ரைனின் ஏற்றுமதியை தகர்க்கும் பொருட்டு துறைமுக உள்கட்டமைப்புகளை குறிவைத்து ரஷியா கடந்தாண்டு முதல் தாக்குதல் மேற்கொண்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com