அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்: 7 பேர் பலி!

லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்: மருத்துவ நிலையத்தில் 7 பேர் உயிரிழப்பு

News image
இஸ்ரேலின் தாக்குதலுக்கு உள்ளான மருத்துவ நிலையம்- ஏபி
Updated On :27 மார்ச் 2024, 11:04 am

இணையதளச் செய்திப் பிரிவு

தெற்கு லெபனானில் உள்ள துணைமருத்துவ நிலையத்தின் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியதில் 7 பேர் பலியானதாக சன்னி முஸ்லீம் அமைப்பு புதன்கிழமை தெரிவித்துள்ளது.

ஹீப்ரு கிராமத்தில் உள்ள இஸ்லாமிய அவசர மற்றும் மீட்பு குழுவின் அலுவலகம் இரவு நடத்தப்பட்ட இஸ்ரேலின் தாக்குதலுக்கு உள்ளானது.

பலியான 7 மருத்துவ பணியாளர்களின் பெயரை அமைப்பு வெளியிட்டுல்ளது.

லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்புக்கும் இஸ்ரேலுக்கும் அக்டோபர் ஹமாஸ் தாக்குதல் தொடங்கியதில் இருந்து மோதல் வெடித்து வருகிறது. 5 மாதத்திற்கு மேலாக நடந்துவரும் போரில் மிக மோசமான தாக்குதல் இது.

நிவாரண பணிகள் மேற்கொள்ளும் குழுவின் மீதான அப்பட்டமான தாக்குதல் கண்டனத்துக்குரியது என அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு நிச்சயம் பதிலடி கொடுக்கவிருப்பதாக ஹிஸ்புல்லா அமைப்பு தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் ராணுவம், ஹீப்ருவில் லெபனான் முஸ்லீம் அமைப்பின் ராணுவ கட்டடத்தைத் தகர்த்ததாகவும் பயங்கரவாத குழுவைச் சேர்ந்த ஒருவரை கொன்றதாகவும் தெரிவித்தது. அந்த நபர் இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதலில் பங்கெடுத்தவர் எனவும் அவருடன் சேர்த்து இன்னும் சிலரையும் கொன்றதாக ராணுவம் தெரிவித்தது.

அக்.7 இஸ்ரேல்- ஹமாஸ் தாக்குதல் தொடங்கியதுமுதல் லெபனான் மற்றும் இஸ்ரேல் எல்லையில் மோதல் வெடித்து வருகிறது. எல்லையில் மட்டும் நடந்துவந்த போர் கடந்த பிப்ரவரி முதல் இஸ்ரேல் வடகிழக்கு லெபனானில் தாக்குதல் நடத்தியதால் தற்போது எல்லை தாண்டி விரிவடைந்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.