சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

இஸ்ரேல் பிணைக்கைதிகளில் ஒருவர் பலி: யார் காரணம்?

ஹமாஸ் பிணையில் இஸ்ரேலியர் மரணம்: கைதிகள் விடுவிப்பு எப்போது?

News image
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் - AP
Updated On :27 மார்ச் 2024, 8:52 am

இணையதளச் செய்திப் பிரிவு

பயங்கரவாத இயக்கமான ஹமாஸ் பிடியில் உள்ள இஸ்ரேல் பிணைக்கைதிகளில் ஒருவர் உயிரிழந்ததாக செவ்வாய்கிழமை பிணைக்கைதிகளுக்காக வாதிடும் குழு தெரிவித்தது.

இஸ்ரேல் அதிகாரிகளுக்கு எப்படி இந்த தகவல் கிடைத்தது என்பது குறித்த விளக்கமில்லை. 35 வயதான யூரியல் பாரூச் என்பவர் பலியாகியுள்ளார்.

சாலை மறியலில் ஈடுபடும் போராட்டக்காரர்கள்

சாலை மறியலில் ஈடுபடும் போராட்டக்காரர்கள்

அக்.7-ம் தேதி இஸ்ரேலின் நோவா இசை நிகழ்வில் கலந்துகொள்ள சென்ற யூரியல், ஹமாஸால் கடத்தி செல்லப்பட்டார்.

அதே நாளில் ஏறத்தாழ 250 பேரை இஸ்ரேல் கைதிகளாக கடத்தி சென்றது. அவர்களில் 120 பேர் விடுவிக்கப்பட்ட நிலையில் எஞ்சியவர்களில் 35 பேர் இறந்திருக்கலாம் என இஸ்ரேல் தெரிவிக்கிறது.

கூண்டுக்குள் அடைந்து போராடுபவர்கள்

கூண்டுக்குள் அடைந்து போராடுபவர்கள்

இஸ்ரேல்- ஹமாஸ் போர் நிறுத்த மற்றும் கைதிகள் விடுவிப்புக்கான பேச்சுவார்த்தை இன்னும் முடிவு எட்டப்படாத நிலையில் பிணைக்கைதிகளாக கொண்டு செல்லப்பட்ட இஸ்ரேலியர்களின் உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் செவ்வாய்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இஸ்ரேல் தலைநகரான டெல் அவிவ் பகுதியில் உள்ள ராணுவ கட்டுப்பாட்டகத்துக்கு வெளியே சாலை மறியலில் ஈடுபட்டனர். பெரிய கூண்டுக்குள் தங்களை அடைத்து கொண்டு மாதிரி போராட்டத்திலும் அவர்கள் ஈடுபட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.