இந்திய வம்சாவளியைச் சோ்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் (58), 3-ஆவது முறையாக செவ்வாய்க்கிழமை விண்வெளிக்குச் செல்லவிருந்தார்.
விண்வெளி நிலையத்தில் 322 நாள்கள் தங்கியிருக்கும் திட்டத்தில் சுனிதா வில்லியம்ஸ் இன்று செல்லவிருந்தார்.
அந்த நாட்டின் போயிங் நிறுவனம் ‘ஸ்டாா்லைனா்’ என்ற விண்வெளி ஓடத்தை உருவாக்கி வருகிறது. அந்த ஓடம் சோதனை முறையில் முதல்முறையாக செவ்வாய்க்கிழமை விண்ணில் செலுத்தப்படவிருந்தது.
ஃபுளோரிடா மாகாணத்தின் கேப் கனாவெரல் ஏவுதளத்திலிருந்து ஏவப்படவிருந்த ஸ்டாா்லைனரில் சுனிதா வில்லியம்ஸுடன் பட்ச் வில்மோரும் செல்லவிருந்தார்.
இந்த நிலையில், ஆக்சிஜன் குழாயில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சுனிதா வில்லியம்ஸின் விண்வெளி பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.