அல்-ஜசீரா அலுவலகங்களில் திடீர் சோதனை!

இஸ்ரேல் போலீஸாரின் திடீர் சோதனை: அல்-ஜசீரா அலுவலகம் குறிவைப்பு
கத்தாரில் உள்ள அல்-ஜசீரா தலைமை அலுவலகம்
கத்தாரில் உள்ள அல்-ஜசீரா தலைமை அலுவலகம்AFP

நாசரேத் நகரத்தில் உள்ள அல்-ஜசீரா செய்தி நிறுவனத்தின் அலுவலகத்தில் இஸ்ரேல் போலீஸார் வியாழக்கிழமை சோதனையில் ஈடுபட்டதுடன் அல்-ஜசீராவுக்குச் சொந்தமான கருவிகளையும் பறிமுதல் செய்தனர்.

கத்தாரை மையமாகக் கொண்ட அல்-ஜசீரா செய்தி நிறுவனத்தின் இஸ்ரேல் அலுவலகங்களை மூடுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்த சில நாள்களுக்குப் பிறகு இந்த சோதனை நடைபெற்றுள்ளது.

இஸ்ரேல், அல்-ஜசீரா சேனலின் ஒளிபரப்பையும் முடக்கியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேல் தொழில்நுட்ப துறை அமைச்சர் இதற்கான ஆணையில் கையெழுத்திட்டார். அதே நாளில் கிழக்கு ஜெருசலேமில் உள்ள அல்-ஜசீரா அலுவலகத்தில் இஸ்ரேல் அரசு சோதனை நடத்தியது.

காஸா போர் தொடர்புடைய நிகழ்வுகளை செய்தியாக்குவதில் பாரபட்சமாக நடந்துகொள்வதாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அல்-ஜசீரா மீது குற்றம் சுமத்தினார்.

இதனை மறுத்துள்ள அல்-ஜசீரா, இந்த தடை சட்டத்திற்கு புறம்பானது எனவும் மனித உரிமைகள் மற்றும் தகவல் பெறும் அடிப்படை உரிமையை மீறும் செயல் எனவும் தெரிவித்தது.

அல்-ஜசீரா தனது பணியாளர்கள் மற்றும் செய்தி நிறுவனத்தின் உரிமையைக் காக்க இஸ்ரேலின் நடவடிக்கைக்கு எதிராக இயன்ற நடவடிக்கையை எடுக்கப் போவதாக தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com