அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்: 3 பேர் பலி!

லெபனானில் இஸ்ரேலின் வான்வழி தாக்குதல்: 3 பேர் உயிரிழப்பு

News image
இஸ்ரேல் தாக்குதலால் புகையும் அல்-நஜ்ஜீரியா- AFP
Updated On :17 மே 2024, 10:35 am

DIN

தெற்கு லெபனானில் இஸ்ரேல் மேற்கொண்ட வான்வழி தாக்குதலில் மூவர் உயிரிழந்ததாக லெபனானிய அதிகாரபூர்வ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

லெபனானில் செயல்பட்டுவரும் ஈரானிய ஆதரவு ஹிஸ்புல்லா பயங்கவாதிகளுக்கும் இஸ்ரேல் ராணுவத்துக்கும் நாள்தோறும் மோதல் வெடித்து வருகிறது.

எட்டாவது மாதமாக தொடரும் இந்த போரில் ஹமாஸுக்கு ஆதரவாக களமிறங்கியுள்ள ஹிஸ்புல்லாவின் தாக்குதல்களால் இஸ்ரேல் தனது தாக்குதலை எல்லைப்பகுதியில் இருந்து லெபனானின் உள்புறம் வரை விரிவுப்படுத்தியுள்ளது.

நஜ்ஜீரியா மற்றும் அடோசியா ஆகியவை இஸ்ரேலின் இலக்காக இருந்ததாகவும் இஸ்ரேல் எல்லையில் இருந்து இந்நகரங்கள் 30 கிமீ தொலைவில் உள்ளதாகவும் செய்தி நிறுவனம் குறிப்பிடுகிறது.

இறந்துபோனவர்களில் இருவர் சிரியாவைச் சேர்ந்தவர்கள் எனவும் ஒருவர் லெபனானியர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இதுவரை நடந்த பரஸ்பர தாக்குதல்களில் லெபனானியர்கள் பலி எண்ணிக்கை 418 ஆக உள்ளது. இவர்களில் 80 பேர் பொதுமக்கள் என ஏஎஃப்பி தெரிவித்துள்ளது.

மேலும் இஸ்ரேல் எல்லைப் பகுதியில் ஹிஸ்புல்லா நடத்திய தாக்குதல்களில் 14 வீரர்கள் மற்றும் 10 பொதுமக்கள் பலியாகியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.