சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

காஸாவின் பல்வேறு இடங்களில் இஸ்ரேல் தாக்குதல்: 23 பேர் பலி!

காஸாவில் இஸ்ரேல் தாக்குதலில் 23 பேர் உயிரிழப்பு

News image
ஜெனின் நகரில் இஸ்ரேல் தாக்குதல்- AP/ Leo Correa
Updated On :23 மே 2024, 4:23 am

DIN

காஸாவின் பல்வேறு இடங்களில் இஸ்ரேல் ராணுவம் மேற்கொண்ட ராணுவ நடவடிக்கையில் குறைந்தது 23 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நள்ளிரவு முதல் காலை வரை காஸாவின் பல்வேறு பகுதிகளில் இஸ்ரேல் வான்வழி மற்றும் பீரங்கி தாக்குதலை நடத்தியதாக ஸின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

வடக்கு காஸாவில் உள்ள ஜபாலியா அகதிகள் முகாம் குடியிருப்பு பகுதியில் இஸ்ரேலிய விமானம் தாக்குதல் நடத்தியதில் குறைந்தது ஆறு பேர் பலியானதாகவும் ஆறு பேர் காயமுற்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இடம்பெயர்ந்த மக்களின் நகரமான அல்-ஜவைதாவிலும் குண்டுகள் வீசப்பட்டதில் 10 பேர் பலியாகியுள்ளனர்.

நஸீரத் அகதிகள் முகாம், தெற்கு நகரமான அல்-சைத்துன் ஆகிய இடங்களிலும் இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது.

ராபாவில் தரைவழி மற்றும் வான்வழி தாக்குதலில் குறைந்தது 5 பாலஸ்தீனர்கள் உயிரிழந்ததாகவும் 7 பேர் காயமுற்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேற்கு ராபா நோக்கி இஸ்ரேல் ராணுவ நடவடிக்கைகளை விரிவாக்கி வருவதாகவும் எகிப்து எல்லைக்கு அருகில் உள்ள பிலாடெல்பியா காரிடருக்கு இணையாக ராணுவம் முன்னேறுவதாக பாலஸ்தீன வட்டாரங்கள் ஸின்ஹுவாவிடம் தெரிவித்துள்ளன.

போதிய வரத்து மற்றும் பாதுகாப்பு இல்லாததால் பாலஸ்தீனத்துக்கான ஐநா முகமை நிவாரண உதவிகளை நிறுத்தி வைத்துள்ளதாக அதன் அதிகாரபூர்வ எக்ஸ் வலைத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.