காஸாவில் 3 இஸ்ரேலிய வீரர்கள் பலி! ஹமாஸின் தாக்குதல்?
ராஃபாவில் மூன்று இஸ்ரேல் வீரர்கள் பலி: காஸா மோதலில் தொடரும் உயிரிழப்புகள்


காஸாவின் தெற்கு பகுதியான ராஃபாவில் இஸ்ரேல் ராணுவம் தொடர் ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகிறது. இந்த நிலையில் ராஃபாவில் உள்ள கட்டடத்தில் அமைக்கப்பட்ட பொறி வெடித்ததில் மூன்று இஸ்ரேல் வீரர்கள் பலியானதாக உள்ளூர் செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
நஹால் காலாட்படையை சேர்ந்த மூவரும் உயிரிழந்ததை இஸ்ரேல் ராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது.
ஒவ்வொரு வீட்டிலும் ஆயுதங்கள் உள்ளதா என ராணுவ வீரர்கள் களச்சோதனையில் ஈடுபட்டு வருவதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதல் எங்கு நடந்தது, அவர்கள் எப்படி இறந்தனர் என்பது குறித்து ராணுவம் விளக்கமளிக்கவில்லை. உள்நாட்டு செய்தி நிறுவனங்களே பொறியில் சிக்கி அவர்கள் இறந்ததாக தெரிவித்துள்ளன.
செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த இந்த தாக்குதலில் பலியான வீரர்களுடன் சேர்த்து இதுவரை 639 ராணுவ வீரர்கள் பலியாகியுள்ளதாகவும் 3,600 பேர் காயமுற்றுள்ளதாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
போர் தொடங்கி ஏழாவது மாதம் நிறைவு பெறவுள்ள நிலையில் பலியான பாலஸ்தீனர்கள் எண்ணிக்கை 36,100 ஆக உள்ளதாக காஸா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...