அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

இஸ்ரேல் தாக்குதலில் 4 குழந்தைகள் உள்பட 9 பாலஸ்தீனர்கள் பலி!

தெற்கு காஸாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் பாலஸ்தீனத்தைச் சேர்ந்த 4 குழந்தைகள் உள்பட 9 பேர் உயிரிழந்தனர்.

News image
தாக்குதலில் பலியான குழந்தைகளைப் பார்த்து அழும் உறவினர்கள்- AP
Updated On :4 நவம்பர் 2024, 5:45 am

DIN

தெற்கு காஸாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் பாலஸ்தீனத்தைச் சேர்ந்த 4 குழந்தைகள் உள்பட 9 பேர் உயிரிழந்தனர்.

காஸாவின் கிழக்கு கான் யூனிஸ் நகருக்குட்பட்ட ஷேக் நாஸர் பகுதியில் டிரோன்கள் மூலம் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்தத் தாக்குதலில் அப்பகுதியிலிருந்த குழந்தைகள் உள்பட பலர் படுகாயம் அடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. படுகாயம் அடைந்தவர்களை மருத்துவ உதவியாளர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

மேலும், இந்தத் தாக்குதலில் 4 குழந்தைகள் உள்பட 9 பேர் உயிரிழந்ததாக பாலஸ்தீன சுகாதாரத் துறை குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை வெளியிட்டுள்ள அறிக்கையில், தெற்கு மற்றும் மத்திய காஸாவில் ஹமாஸ் படையினருக்குச் சொந்தமான ஆயுதக் கிடங்குகள் மற்றும் முகாம்களைக் குறிவைத்து இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தி முன்னேறின எனக் குறிப்பிட்டுள்ளது.

ஐரோப்பிய குழுவுடன் பேச்சு

பாலஸ்தீனத்தின் மேற்கு கரையில் உள்ள ரமல்லாஹ் பகுதியில் பாலஸ்தீன வெளியுறவுத் துறை அமைச்சர் வர்சென் ஷாஹின், ஐரோப்பிய நாடாளுமன்ற தூதுக்குழுவினரை வரவேற்றார்.

இதில், காஸாவின் தற்போதைய போர் சூழல் குறித்து ஷாஹின் எடுத்துரைத்ததாகத் தெரிகிறது.

மேலும், காஸாவில் படுகொலைகளை நிறுத்த சர்வதேச நட்பு நாடுகள் ஒத்துழைக்க வேண்டும் மற்றும் பாலஸ்தீனிய மக்களின் உரிமையை உறுதிப்படுத்தும் வகையிலான சர்வதேச நீதிமன்ற தீர்ப்புகளை கட்டியெழுப்புவது குறித்து விவாதித்ததாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் மீது கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி காஸாவின் ஹமாஸ் படையினர் இஸ்ரேல் மீது சரமாரியாகத் தாக்குதல் நடத்தினர். இதில் 1200 பேர் உயிரிழந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஹமாஸ் ஆயுதக் குழுவினர் பதுங்கியுள்ள காஸாவின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.