ஸ்பெயினில் முதியோர் இல்லத்தில் தீ விபத்து: 10 பேர் பலி
ஸ்பெயினில் முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் பலியாகினர்.


ஸ்பெயினில் முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் பலியாகினர்.
ஸ்பெயினின் சராகோசாவில் உள்ள முதியோர் இல்லத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் 10 பேர் பலியானார்கள்.
மேலும் 2 பேர் காயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவில்லை என உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதனிடையே தீவிபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.
தீ விபத்தின் போது முதியோர் இல்லத்தில் 82 பேர் இருந்துள்ளனர்.
இந்த இல்லத்தில் முதியவர்கள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களும் பராமரிக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...