லெபனான், ஏமன் ஆகிய நாடுகளின் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்திவரும் நிலையில், அந்நாட்டிற்கான விமான சேவை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. தற்போது அதனை நீட்டிப்பதாக ஐரோப்பிய ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது.
ஹிஸ்புல்லாக்களைக் குறிவைத்து லெபனானில் தரைவழி தாக்குதலைத் தாக்குதலை இஸ்ரேல் நடத்தி வருகிறது. இதனால் அந்த நாட்டின் எல்லை கிராமங்களில் உள்ள பொதுமக்களை வெளியேற உத்தரவிட்டுள்ளது.
இஸ்ரேலில் போர் பதற்றம் நீடித்துவருவதால், விமான சேவையை சில நாடுகள் நிறுத்திவைத்திருந்தன.
ஜெர்மனியின் லுப்தான்சா விமான நிறுவனம், ஸ்விட்சர்லாந்தின் சுவிஸ் சர்வதேச விமான நிறுவனம் உள்ளிட்ட நிறுவனங்களும் தங்களின் விமான சேவைகளை தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளன.
இதோடு மட்டுமின்றி போலந்து, ஹங்கேரி, நெதர்லாந்து, ஸ்பெயின், பெல்ஜியம் ஆகிய நாடுகளும் இஸ்ரேலுக்கான விமான சேவையை தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளன.
இந்நிலையில் இஸ்ரேலுக்கான விமான சேவை நிறுத்தத்தை அக்டோபர் 31 ஆம் தேதி வரை நீட்டிப்பதாக இத்தாலி அறிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இஸ்ரேலுக்கான விமான சேவை நிறுத்தத்தை ஜூன் வரை நீட்டித்தது ஏர் இந்தியா! 40,000 இந்தியர்கள் கவலை!

இஸ்ரேல் - லெபனான் போா் நிறுத்தம் 3 வாரம் நீட்டிப்பு

போர்நிறுத்தம்! டிரம்ப்பின் அறிவிப்பை மீறி லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்!

இஸ்ரேல்-லெபனான் சண்டை நிறுத்தம்: அமெரிக்க அறிவிப்பை நிராகரித்தது ஹிஸ்புல்லா!
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



