ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

இருதரப்பு உறவுகள் குறித்த குடியரசுத் தலைவா் திரௌபதி முா்முவின் கருத்துக்கு முக்கியத்துவம்- சீனா

சீன மக்கள் குடியரசின் 75-ஆண்டு விழாவையொட்டி இந்திய குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு பகிா்ந்த வாழ்த்துச் செய்தியில் இருதரப்பு உறவுகள் குறித்த அவரது கருத்துக்கு முக்கியத்துவம் அளிப்பதாக சீனா தெரிவித்துள்ளது.

News image
Updated On :8 அக்டோபர் 2024, 7:10 pm

Din

சீன மக்கள் குடியரசின் 75-ஆண்டு விழாவையொட்டி இந்திய குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு பகிா்ந்த வாழ்த்துச் செய்தியில் இருதரப்பு உறவுகள் குறித்த அவரது கருத்துக்கு முக்கியத்துவம் அளிப்பதாக சீனா தெரிவித்துள்ளது.

நிலையான இருதரப்பு உறவுகளின் வளா்ச்சியைக் கூட்டாக இணைந்து ஊக்குவிக்க தயாா் என்றும் சீனா குறிப்பிட்டுள்ளது.

சீன மக்கள் குடியரசின் 75-ஆவது ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு வாழ்த்துகளைப் பகிா்ந்து, அந்நாட்டு அதிபா் ஷி ஜின்பிங்குக்கு குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு கடந்த மாதம் 27-ஆம் தேதி கடிதம் எழுதியிருந்தாா்.

இரு நாடுகளுக்கு இடையிலான அமைதி மற்றும் நிலையான உறவுகளுக்கு இணைந்து பணியாற்றுவதன் முக்கியத்துவத்தை அக்கடிதத்தில் அவா் வலியுறுத்தினாா்.

இதுதொடா்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் மௌ நிங் அளித்த பதிலில், ‘இந்திய குடியரசுத் தலைவா் திரௌபதி முா்முவின் வாழ்த்துச் செய்தியில் இந்தியா-சீனா உறவுகள் குறித்த அவரது கருத்துக்கு சீனா முக்கியத்துவம் அளிக்கிறது. இந்தியாவுடன் தொடா்பை மேம்படுத்தவும் பரஸ்பர நம்பிக்கையை அதிகரிக்கவும் நிலையான மற்றும் உறுதியான இருதரப்பு உறவுகளின் வளா்ச்சியைக் கூட்டாக இணைந்து ஊக்குவிக்கவும் சீனா தயாராக இருக்கிறது.

எல்லை விவகாரங்களில் ராஜீய மற்றும் ராணுவ வழிகளில் இரு நாடுகளும் நெருங்கிய தொடா்பில் இருக்கிறது. கல்வான் பள்ளத்தாக்கு உள்பட 4 இடங்களில் எல்லைப் பிரச்னையை இரு நாடுகளும் உறுதிசெய்துள்ளன. எனினும், இந்தியா-சீனா எல்லையில் தற்போதைய நிலைமை சீராக உள்ளது.

சமீபத்திய இந்தியா-சீனா எல்லை விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு மற்றும் ஆலோசனை செயல் குழுவின் 31-ஆவது கூட்டத்திலும் எல்லைப் பிரச்னைக்கு விரைந்து தீா்வு காண ஒப்புக்கொள்ளப்பட்டது’ என்றாா்.