தில்லியில் ஞானபீட விருது பெற்றார் வைரமுத்து!முட்டை கொள்முதல் விலை ரூ. 6.70-ஆக நிர்ணயம்.லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் ஏ. அருண், சென்னை காவலர் பயிற்சி மைய இயக்குநராகப் பணியிட மாற்றம்பட்ஜெட்: ஜூலை 16 -ல் தமிழக அமைச்சரவை கூட்டம்!தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் கழகத்தின் தலைவராக லயோலா மணி நியமனம்!பெரம்பூர் எம்எல்ஏ அலுவலகத்தை திறந்து வைத்த முதல்வர் விஜய்!மேற்கு வங்க இடைத்தேர்தல்: பாஜக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்! முதல்வர் விஜய்யுடன் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழும தலைவர் மனோஜ் குமார் சொந்தாலியா சந்திப்பு! திமுக முன்னாள் அமைச்சர் தா.மோ. அன்பரசன் மீது நில அபகரிப்பு வழக்குசென்னையில் தரையிறங்கிய விமானம் மீது பறவை மோதியது!எழுத்தாளர் பூமணி உடலுக்கு அரசு மரியாதை: முதல்வர் விஜய் அறிவிப்பு! 7,700 பக்தர்கள் அடங்கிய 12-வது குழு அமர்நாத் புறப்பட்டது!
/

பாகிஸ்தானில் மேலும் 2 சிறுவர்களுக்கு போலியோ; மொத்த பாதிப்பு 39-ஆக அதிகரிப்பு

பாகிஸ்தானில் மேலும் 2 சிறுவர்களுக்கு போலியோ பாதிப்பு கண்டறியப்பட்டதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.

News image
Updated On :20 அக்டோபர் 2024, 11:39 am IST

பாகிஸ்தானில் மேலும் 2 சிறுவர்களுக்கு போலியோ பாதிப்பு கண்டறியப்பட்டதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.

பாகிஸ்தானில் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு மருந்து அளிப்பது மதத்துக்கு எதிரானது என்று அந்த நாட்டின் தெஹ்ரீக்-இ-தலிபான் உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகள் கூறி வருகின்றன. போலியோ தடுப்பு மருந்துகள் முஸ்லிம் குழந்தைகளின் இனப்பெருக்கத் திறனைக் குறைப்பதற்கான மேற்கத்திய நாடுகளின் சதி என்று அந்த அமைப்புகள் நம்புகின்றன.

இதன் காரணமாக, போலியோ தடுப்பு மருந்துப் பணியாளா்கள் மற்றும் அவா்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் படையினரைக் குறிவைத்து அடிக்கடி பயங்கரவாதத் தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. இதில் ஏராளமானவா்கள் உயிரிழந்தும் வருகின்றனா். உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மட்டுமே போலியோ பாதிப்பு உள்ளது.

இந்த நிலையில் பாகிஸ்தானில் மேலும் 2 சிறுவர்களுக்கு போலியோ பாதிப்பு கண்டறியப்பட்டதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர். சிந்து மாகாணத்தில் உள்ள சங்கர் மற்றும் மிர்புர்காஸ் மாவட்டங்களில் சனிக்கிழமை இந்த பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டதாக டான் செய்தித்தாள் தெரிவித்துள்ளது.

மிர்புர்காஸ் மற்றும் சங்கரிலிருந்து நடப்பு ஆண்டு போலியோ பாதிப்புகள் பதிவாவது இதுவே முதல்முறை என்று கூறப்படுகிறது. கடந்த பத்து மாதங்களில், பாகிஸ்தானில் 39 போலியோ பாதிப்புகள் பதிவாகியுள்ளன. அவற்றில் 20 பலுசிஸ்தானிலிருந்தும், 12 சிந்துவிலிருந்தும், ஐந்து கைபர் பக்துன்க்வாவிலிருந்தும், பஞ்சாப் மற்றும் இஸ்லாமாபாத்திலிருந்து தலா ஒன்றும் பதிவாகியுள்ளன.

முன்னதாக ஒரு நாளுக்கு முன்னதாக நான்கு போலியோ பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் 2 புதிய போலியோ பாதிப்புகள் கண்டறியப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.