பெருவின் முன்னாள் அதிபருக்கு 20 ஆண்டு சிறை!

பெருவின் முன்னாள் அதிபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
 அலெஜான்ட்ரோ டோலிடோ
அலெஜான்ட்ரோ டோலிடோ
Published on
Updated on
1 min read

பெருவின் முன்னாள் அதிபர் அலெஜான்ட்ரோ டோலிடோவுக்கு 20 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பெருவின் முன்னாள் அதிபர் அலெஜான்ட்ரோ டோலிடோ பிரேசிலில் உள்ள கட்டுமான நிறுவனத்துடன் ஊழலில் ஈடுபட்டதாக 20 ஆண்டுகள் மற்றும் 6 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அவர் கட்டுமான நிறுவனத்தில் பல லட்சம் டாலர்கள் லஞ்சம் பெற்றுள்ளது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மால்டோவா பொதுவாக்கெடுப்பு: ஐரோப்பிய யூனியனில் இணைய பெரும்பான்மை ஆதரவு

தென் அமெரிக்க நாடான பெருவில் நெடுஞ்சாலை அமைக்க அனுமதித்ததற்கு ஓடேபெக்ட் என்னும் கட்டுமான நிறுவனத்தில் இருந்து 35 மில்லியன் டாலர் லஞ்சம் பெற்றதாக டோலிடோ மீது அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளார்.

அலெஜான்ட்ரோ டோலிடோ 2001 முதல் 2006 வரை பெருவின் அதிபராக பதவி வகித்துள்ளார்.

பாகிஸ்தான் தலைமை நீதிபதிகளின் பதவிக் காலத்துக்கு வரம்பு

இந்த வழக்கை அமெரிக்கா விசாரணை நடத்தியது. அதன்படி, மெக்சிகோ, குவாதமாலா, ஈகுவடார் ஆகிய நாடுகளிலும் அமெரிக்கா தனது விசாரணையைத் தொடங்கியது. மேலும், இந்த விசாரணையில் டோலிடோ உள்பட பெருவின் முன்னாள் அதிபர்கள் 4 பேர் மீது அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

ஆனாலும், இந்த ஊழல் வழக்கை அலெஜான்ட்ரோ டோலிடோ மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஹிஸ்புல்லா தொடா்புடைய வங்கிகள் மீது இஸ்ரேல் தாக்குதல்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com