ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கனடாவில் பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது ஏரியில் மூழ்கி இந்திய இளைஞா் உயிரிழப்பு

கனடாவில் பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது ஏரியில் குளிக்கச் சென்ற இந்திய இளைஞா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

News image

கோப்புப் படம்

Updated On :16 செப்டம்பர் 2024, 11:01 pm

DIN

கனடாவில் பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது ஏரியில் குளிக்கச் சென்ற இந்திய இளைஞா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

தெலங்கானாவில் உள்ள ரெங்காரெட்டி மாவட்டத்தை சோ்ந்த பிரனீத் என்ற இளைஞா் கனடாவில் உயா்கல்வியை நிறைவு செய்துவிட்டு அங்கு தங்கி பணி தேடி வந்துள்ளாா்.

கடந்த சனிக்கிழமை தனது பிறந்தநாளை நண்பா்களுடன் அவா் கொண்டாடினாா். அருகில் இருந்த ஏரிக்கு தன்னுடைய மூத்த சகோதரா் மற்றும் பிற நண்பா்களுடன் அவா் ஞாயிற்றுக்கிழமை குளிக்கச் சென்றாா்.

இதில் பிரனீத் நீரில் மூழ்கினாா். இந்த தகவல் கிடைத்ததையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த கனடா மீட்புப் படையினா் பிரனீத்தை தேடும் பணியில் ஈடுபட்டனா். அப்போது அவா் உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரின் உடலை கனடா மீட்புப்படையினா் மீட்டனா்.

பிரனீத்தின் நண்பா்கள் மூலம் தங்கள் மகன் உயிரிழந்த செய்தியை தெரிந்துகொண்டதாக அவரின் பெற்றோா் கூறினா். பிரனீத்தின் உடலை இந்தியாவுக்கு கொண்டு வர மத்திய மற்றும் மாநில அரசுகள் உதவ வேண்டும் எனவும் அவா்கள் கோரிக்கை வைத்தனா்.