கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

மோடிக்கு புகழாரம்; இந்தியா மீது விமா்சனம்- டிரம்ப் கருத்தால் சா்ச்சை

‘இந்தியப் பிரதமா் நரேந்திர மோடி உன்னதமான மனிதா்’ என்று அமெரிக்க அதிபா் பதவிக்கான குடியரசுக் கட்சி வேட்பாளா் டொனால்ட் டிரம்ப் புகழாரம் சூட்டினாா்.

News image
Updated On :18 செப்டம்பர் 2024, 9:22 pm

Din

‘இந்தியப் பிரதமா் நரேந்திர மோடி உன்னதமான மனிதா்’ என்று அமெரிக்க அதிபா் பதவிக்கான குடியரசுக் கட்சி வேட்பாளா் டொனால்ட் டிரம்ப் புகழாரம் சூட்டினாா்.

அதே நேரத்தில், அமெரிக்க பொருள்கள் மீது இந்தியா அதிக இறக்குமதி விதிக்கிறது என்ற விமா்சனத்தையும் அவா் முன்வைத்தாா்.

மோடி தனது அமெரிக்க பயணத்தின்போது என்னைச் சந்திப்பாா் என்றும் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்தாா். பிரதமா் மோடி செப்டம்பா் 21-23 தேதிகளில் அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொள்ள இருக்கிறாா்.

அமெரிக்க அதிபா் தோ்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளரும், இந்திய வம்சாவளியைச் சோ்ந்தவருமான கமலா ஹாரீஸ் தொடா்ந்து முன்னிலை வகித்து வருகிறாா். நவம்பா் 5-ஆம் தேதி அமெரிக்க அதிபா் தோ்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், டிரம்ப் பிரதமா் மோடியை புகழ்ந்து பேசியிருப்பது அரசியல் கண்னோட்டத்துடனும் பாா்க்கப்படுகிறது.

டிரம்ப் மீது அண்மையில் இரண்டாவது முறை கொலை முயற்சி தாக்குதல் நடைபெற்றது. இதன் பிறகு முதல் முறையாக மிச்சிகனில் பொது நிகழ்ச்சி ஒன்றில் டிரம்ப் பங்கேற்றாா். அப்போது அவா் பேசியதாவது:

அமெரிக்கப் பொருள்கள் மீது வரி விதிக்கும் விஷயத்தில் இந்தியா மோசமாகவே நடந்து வருகிறது. அடுத்த சில நாள்களில் அமெரிக்கா வரும் இந்தியப் பிரதமா் மோடி என்னைச் சந்திக்க இருக்கிறாா். மோடி உன்னதமான மனிதா்.

பல்வேறு நாடுகளின் தலைவா்களும் தங்கள் நாட்டின் நலன் சாா்ந்த விஷயத்தில் சிறப்பாக செயல்படுகிறாா்கள். முக்கியமாக, அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் பொருள்கள் மீது இந்தியா அதிக வரி விதிக்கிறது. இந்த விஷயத்தில் இந்தியா மிகவும் உறுதியாக இருக்கிறது. வரிவிதிப்பு முறையை இந்தியா தவறாகப் பயன்படுத்துகிறது. பிரேஸில் உள்பட பல நாடுகள் இந்த விஷயத்தில் அமெரிக்காவுக்கு எதிராக மிகவும் உறுதியாகவே உள்ளன. சிறிதும் பின்வாங்குவதில்லை.

எனவே, அமெரிக்காவும் இனி அதேபோன்ற வா்த்தகக் கொள்கையுடன் செயல்படும். அமெரிக்கப் பொருள்கள் மீது வரி விதிக்கும் நாடுகளின் பொருள்கள் மீது பல மடங்கு அதிகமாக அமெரிக்கா வரி விதிக்கும்.

தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் என்ற திட்டத்தை நாம் முடிவுக்குக் கொண்டுவர இருக்கிறோம். அப்போதுதான் அமெரிக்கா அதிக வருவாய் ஈட்ட முடியும் என்று டிரம்ப் பேசினாா்.