எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

உலக அமைதிக்கு பயங்கரவாதம் அச்சுறுத்தலாக இருக்கிறது: ஐ.நா. அவையில் பிரதமர் மோடி!

ஐக்கிய நாடுகள் அவையில் பிரதமர் மோடி உரை நிகழ்த்தினார்.

News image
பிரதமர் மோடி
Updated On :23 செப்டம்பர் 2024, 4:02 pm

DIN

ஐக்கிய நாடுகள் அவையில் 79-வது பொதுச் சபைக் கூட்டத்தில் பிரதமர் மோடி உரையில் நிகழ்த்தினார்.

இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கும் க்வாட் கூட்டமைப்பின் 4-ஆவது உச்சி மாநாடு, அமெரிக்காவின் டெலாவா் மாகாணத்தின் வில்மிங்டன் நகரில் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து நியூயார்க்கில் அமெரிக்கவாழ் இந்தியர்களுடன் கலந்துரையாடலில் கலந்துகொண்டார்.

ஐக்கிய நாடுகள் அவையில் 79-வது பொதுச்சபைக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

மனித குலத்தின் வெற்றி நமது கூட்டு பலத்தில் இருக்கிறது. போர்க்களத்தில் இல்லை. உலகளாவிய அமைதி, வளர்ச்சிக்கு சர்வதேச அமைப்புகளில் சீர்திருத்தங்கள் அவசியமானதாகும்.

உலக அமைதிக்கு பயங்கரவாதம் தீவிர அச்சுறுத்தலாக இருக்கிறது. இணையவழி, கடல் மற்றும் விண்வெளி போன்ற பகுதிகளிலும் மோதல்கள் உருவாகி வருகின்றன.

இந்தியா தனது இணையவழி பொது உள்கட்டமைப்பை உலகம் முழுவதும் பகிர்ந்து கொள்ள தயாராக உள்ளது” என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.