
தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த சிங்கப்பூர் முன்னாள் அமைச்சர் எஸ். ஈஸ்வரன் மீது சுமத்தப்பட்டிருந்த சில முறைகேடு குற்றச்சாட்டுகளை அந்த நாட்டு உயர்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உறுதி செய்தது.
எனினும், விதிகளை மீறி அன்பளிப்புகளைப் பெற்றுக் கொண்டது போன்ற சிறிய குற்றச்சாட்டுகளை மட்டுமே நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. தொழில் அதிபர்கள் ஆங் பெங் செங், லும் காக் செங் ஆகியோருக்கு தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி சலுகைகள் அளித்தது போன்ற தீவிர குற்றச்சாட்டுகளை நீதிமன்றம் நிரூபிக்கவில்லை. அது போன்ற குற்றச்சாட்டுகளை அரசுத் தரப்பு முன்னெடுத்துச் செல்லப்போவதில்லை என்று ஊடகங்கள் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
கடந்த 50 ஆண்டுகளில் அமைச்சர் ஒருவருக்கு எதிராக ஊழல் வழக்கு நடைபெறுவது சிங்கப்பூரில் இது முதல்முறையாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.