திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

சிங்கப்பூர்: முன்னாள் அமைச்சர் ஈஸ்வரன் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணம்

தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த சிங்கப்பூர் முன்னாள் அமைச்சர் எஸ். ஈஸ்வரன் மீது சுமத்தப்பட்டிருந்த சில முறைகேடு குற்றச்சாட்டுகளை அந்த நாட்டு உயர்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உறுதி செய்தது.

News image

எஸ். ஈஸ்வரன்

Updated On :25 செப்டம்பர் 2024, 4:56 am IST

தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த சிங்கப்பூர் முன்னாள் அமைச்சர் எஸ். ஈஸ்வரன் மீது சுமத்தப்பட்டிருந்த சில முறைகேடு குற்றச்சாட்டுகளை அந்த நாட்டு உயர்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உறுதி செய்தது.

எனினும், விதிகளை மீறி அன்பளிப்புகளைப் பெற்றுக் கொண்டது போன்ற சிறிய குற்றச்சாட்டுகளை மட்டுமே நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. தொழில் அதிபர்கள் ஆங் பெங் செங், லும் காக் செங் ஆகியோருக்கு தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி சலுகைகள் அளித்தது போன்ற தீவிர குற்றச்சாட்டுகளை நீதிமன்றம் நிரூபிக்கவில்லை. அது போன்ற குற்றச்சாட்டுகளை அரசுத் தரப்பு முன்னெடுத்துச் செல்லப்போவதில்லை என்று ஊடகங்கள் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

கடந்த 50 ஆண்டுகளில் அமைச்சர் ஒருவருக்கு எதிராக ஊழல் வழக்கு நடைபெறுவது சிங்கப்பூரில் இது முதல்முறையாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.