நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

இந்தோனேசியா: சட்டவிரோத தங்கச் சுரங்கத்தில் நிலச்சரிவு! 15 பேர் பலி!

கனமழையால் தங்கச் சுரங்கத்தில் நிலச்சரிவு

News image

கோப்புப் படம்

Updated On :27 செப்டம்பர் 2024, 11:00 am

DIN

இந்தோனேசியாவில் பெய்து வரும் கனமழையால் தங்கச் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 15 பேர் பலியாகினர்.

இந்தோனேசியாவின் மேற்கு சுமத்ரா மாகாணத்தில் பெய்து வரும் கனமழையால் பல பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில், வியாழக்கிழமையில் பெய்த கனமழையின் காரணமாக சோலோக் மாவட்டத்தில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்தது.

மேலும், நிலச்சரிவின்போது அந்த சுரங்கத்தில் 25 பேர் வரையில் பணியில் இருந்துள்ளனர். அவர்களில் 15 பேர் நிலச்சரிவில் சிக்கி பலியாகினர். பிற தொழிலாளர்களில் 3 பேர் காயமடைந்தும், இடிபாடுகளில் சிக்கிய 7 பேரை தேடியும் வருகின்றனர்.

சுரங்கத்தில் இருந்த தொழிலாளர்கள், இயந்திரங்கள் ஏதுமின்றி கைகளாலேயே தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்ததாக கூறப்படுகிறது. விபத்து ஏற்பட்ட பகுதிக்கு சாலை இல்லாத காரணத்தினால் 8 மணிநேரம் ஏற வேண்டியுள்ளதாக மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள ராணுவத்தினர் உள்ளிட்ட மீட்புக் குழுவினர் கூறுகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.