காஸா: பலி எண்ணிக்கை 28 ஆயிரத்தைக் கடந்தது
இஸ்ரேல்- ஹமாஸ் போரில் பலியான பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 28 ஆயிரத்தைக் கடந்துள்ளது.


இஸ்ரேல்- ஹமாஸ் போரில் பலியான பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 28 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
அக்.7-ம் தேதி தெற்கு இஸ்ரேலில் ஹமாஸ் பயங்கரவாதிகள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தியதில் 1,200-க்கும் அதிகமான இஸ்ரேலியர்கள் பலியாகினர்.
இஸ்ரேல் அந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்விதமாக காஸாவில் நடத்திவரும் வான்வழி மற்றும் தரைவழி போர் நடவடிக்கைகள் 5-வது மாதமாக தொடர்ந்து வருகிறது.

இஸ்ரேல் தாக்குதலில் தகர்க்கப்பட்ட கட்டடம் | AP
கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேல் வான்வழி தாக்குதலில் 117 பேர் பலியானதாகவும் ஒட்டுமொத்தமாக பலி எண்ணிக்கை 28,064 ஆக உயர்ந்துள்ளதாகவும் காஸா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க: அமேசானின் பங்குகளை விற்கும் ஜெப் பெசோஸ்!
காஸாவில் 3-இல் 2 பங்கு ராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலையில் 80 சதவிகித மக்கள் நெரிசல் மிகுந்த ராபாவுக்குள் இடம்பெயர்ந்துள்ளனர். தற்போது ராபா நோக்கி போர் நடவடிக்கையை விரிவாக்கும் இஸ்ரேலின் முடிவை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் எச்சரித்துள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...