புத்தாண்டு நாளிலும் காஸா மீது இஸ்ரேல் ராணுவம் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது.
உலகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாடப்பட்டு வரும் நிலையில், வடக்கு காஸாவின் ஜபாலியா பகுதியை நோக்கி இஸ்ரேல் ராணுவம் இன்று (ஜன. 1) குண்டுமழை பொழிந்தது.
இஸ்ரேல் ராணுவத்தின் இந்தத் தாக்குதலில் 6 பேர் வரை உயிரிழந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.
இதேபோன்று மத்திய காஸாவிலுள்ள மகாஸி முகாம் மீதும் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது. காஸாவில் வீடுகளை இழந்த மக்கள் மகாஸி முகாமில் அகதிகளாக தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், முகாம் மீது நடத்திய தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டனர். பல்வேறு மக்கள் படுகாயமடைந்தனர்.
பாலஸ்தீனத்தின் காஸா எல்லைக்குட்பட்ட ஹமாஸ் படையினருக்கும் இஸ்ரேல் ராணுவத்துக்கும் இடையே கடந்த ஆண்டு அக்டோபர் முதல் போர் நடைபெற்று வருகிறது.
இந்தப்போரில் காஸாவின் பெரும்பகுதிகளை இஸ்ரேல் ராணுவம் தரைமட்டமாக்கியதுடன், தற்போது தரைவழித் தாக்குதலும் நடத்தி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 95-ஐ கடந்தது!

பெங்களூருவில் பெய்த கனமழைக்கு சுவா் இடிந்து விழுந்து 7 போ் பலி: பிரதமர் மோடி இரங்கல்; நிவாரண நிதி அறிவிப்பு

லடாக்கில் மிதமான நிலநடுக்கம்!

விஜய்தான் தமிழ்நாட்டை ஆள்வார்; இலங்கை, நேபாளம் போல கருத்துக்கணிப்புகள் பொய்யாகும்! - செங்கோட்டையன்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


