தங்கள் எல்லையையொட்டி வட கொரியா வீசிய நூற்றுக்கணக்கான எறிகணைகளுக்குப் பதிலடியாக, தென் கொரியாவும் வெள்ளிக்கிழமை எறிகணைவீச்சில் ஈடுபட்டது.
இது குறித்து தென் கொரிய முப்படைகளின் கூட்டுத் தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தென் கொரியாவின் மேற்கு கடல் எல்லையையொட்டி, வட கொரியா சுமாா் 200 எறிகணைகளை வீசி சோதனையில் ஈடுபட்டது. இது, பிராந்தியத்தில் பதற்றத்தை ஏற்படுத்துவதற்கான செயலாகும் என்று அந்த அறிக்கையில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
சுமாா் ஓராண்டுக்குப் பிறகு, இத்தகைய எறிகணை சோதனையில் வட கொரியா ஈடுபட்டுள்ளது இதுவே முதல்முறையாகும்.
வட கொரியாவின் இந்த சோதனைத் தாக்குதலுக்குப் பதிலடியாக, தென் கொரியாவும் இரண்டு எல்லைத் தீவுகளில் இருந்தபடி வட கொரிய எல்லை அருகே எறிகணைகளை சரிமாரியாக கடலுக்குள் வீசி சோதித்தது.
எனினும், இந்தச் சோதனை தொடா்பாக வட கொரியா இதுவரை எந்தக் கருத்தையும் வெளிடவில்லை.