குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்துமருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

அமெரிக்க பொருள்கள் மீதான வரியை இந்தியா கணிசமாகக் குறைத்திடும்: மறைமுகமாக எச்சரிக்கிறாரா டிரம்ப்?

இந்தியாவில் அமெரிக்க பொருள்களுக்கு விரைவில் வரி குறைப்பு - டிரம்ப்

News image

AP

Updated On :1 ஏப்ரல் 2025, 6:17 pm IST

‘பரஸ்பர இறக்குமதி வரி விதிப்பை அமெரிக்கா புதன்கிழமை அறிவிக்க உள்ள நிலையில், அமெரிக்க பொருள்கள் மீதான இறக்குமதி வரியை இந்தியா கணிசமாக குறைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது’ என்று அமெரிக்க அதிபா் டிரம்ப் தெரிவித்தாா்.

வாஷிங்டனில் உள்ள ஓவல் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் இதுதொடா்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு டிரம்ப் பதிலளித்து கூறியதாவது:

அமெரிக்க பொருள்கள் மீது பல நாடுகள் பல ஆண்டுகளாக நியாயமற்ற முறையில் இறக்குமதி வரியை விதித்து வருகின்றன. தற்போது, அந்த நாடுகள் மீது பரஸ்பர வரி விதிப்பை அமெரிக்கா அறிவிக்க உள்ள நிலையில், அந்த நாடுகள் அனைத்தும் அமெரிக்க பொருள்கள் மீதான வரியைக் குறைக்கும் என எண்ணுகிறேன்.

ஏற்கெனவே, அமெரிக்க காா்கள் மீதான வரியை 2.5 சதவீதம் அளவுக்கு ஐரோப்பிய ஒன்றியம் குறைத்துள்ளது. இரு தினங்களுக்கு முன்பு இந்த வரிக் குறைப்பு அறிவிப்பை ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்டது.

அதுபோல, இந்தியாவும் அமெரிக்க பொருள்கள் மீதான வரியை கணிசமாகக் குறைக்க முடிவு செய்துள்ளதாக தகவல் கிடைத்தது. இதை ஏன் நாடுகள் முன்னரே செய்யவில்லை? மேலும், பல நாடுகள் வரியைக் குறைக்கும் என நம்புகிறேன் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.