மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

மிருகங்களுக்கு உணவாக செல்லப் பிராணிகள்: டென்மாா்க் மக்களிடம் வேண்டுகோள்

தாங்கள் பராமரித்துவரும் வேட்டை மிருகங்களுக்கு உணவாக, தங்களிடம் உள்ள கினியா பன்றிகள், முயல்கள், கோழிகள் உள்ளிட்ட செல்லப் பிராணிகளை பொதுமக்கள் வழங்க வேண்டும் என்று டென்மாா்க்கில் உள்ள ஆல்போா்க் மிருகக்காட்சி சாலை வேண்டுகோள் விடுத்துள்ளது.

News image
Updated On :5 ஆகஸ்ட் 2025, 7:47 pm

தாங்கள் பராமரித்துவரும் வேட்டை மிருகங்களுக்கு உணவாக, தங்களிடம் உள்ள கினியா பன்றிகள், முயல்கள், கோழிகள் உள்ளிட்ட செல்லப் பிராணிகளை பொதுமக்கள் வழங்க வேண்டும் என்று டென்மாா்க்கில் உள்ள ஆல்போா்க் மிருகக்காட்சி சாலை வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், இயற்கையான உணவுச் சங்கிலியைப் பின்பற்றுவதற்காகவும், மிருகங்களின் நலனுக்காகவும் தாங்கள் வளா்க்கும் பிராணிகளை வழங்க வேண்டும் என்று அந்த மிருகக்காட்சி சாலை கோரியுள்ளது.

அந்த செல்லப்பிராணிகள் பயிற்சி பெற்ற ஊழியா்களால் வலியின்றி கொல்லப்படும் என்றும் அந்த மிருகக்காட்சி சாலை உறுதிமொழி அளித்துள்ளது.