திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய் மதுரை மேலூர் அருகே கார் விபத்தில் 5 பேர் பலி, 3 பேர் காயம் நீர்வரத்து இல்லாததால் தஞ்சை மாவட்டத்தில் களையிழந்த ஆடிப்பெருக்கு விழா! தங்கம் விலை உயர்ந்தது! எவ்வளவு தெரியுமா? வெள்ளி விலை? (ஆக. 3) கபினியில் நீர்த் திறப்பு 27,000 கன அடியாக உயர்வு
/

அமெரிக்காவில் மீண்டும் விமான விபத்து!

அமெரிக்காவில் வெள்ளிக்கிழமை இரவு விமானம் விபத்துக்குள்ளானது பற்றி...

News image

விபத்து ஏற்பட்ட பகுதி.

Updated On :1 பிப்ரவரி 2025, 8:24 am IST

அமெரிக்காவில் மற்றொரு சிறிய ரக விமானம் வெள்ளிக்கிழமை இரவு வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது.

குடியிருப்புப் பகுதியில் விமானம் விழுந்து வெடித்து சிதறியதால், விபத்துக்குள்ளான பகுதியில் பதற்றம் நிலவுகிறது.

அமெரிக்காவின் வடகிழக்கு பிலடெல்பியா விமான நிலையத்தில் இருந்து வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணியளவில் லியர்ஜெட் 55 என்ற விமானம் புறப்பட்டுள்ளது.

மிசோரியில் உள்ள ஸ்பிரிங்ஃபீல்ட்-பிரான்சன் தேசிய விமான நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்தபோது திடீரென்று தரையில் விழுந்து வெடித்துள்ளது.

விபத்துக்குள்ளான விமானத்தில் 6 பேர் பயணித்ததாக கூறப்படும் நிலையில், அவர்களின் நிலை குறித்த தகவல் வெளியாகவில்லை.

குடியிருப்புப் பகுதியில் விமானம் விழுந்து வெடித்துச் சிதறியதால், மேலும் சிலர் உயிரிழந்திருக்க கூடும் என்று அஞ்சப்படுகிறது.

இந்த விபத்தை எக்ஸ் தளத்தில் உறுதி செய்துள்ள பிலடெல்பியா அவசர மேலாண்மை அலுவலகம், வடகிழக்கு பிலடெல்பியாவிலுள்ள காட்மேன் மற்றும் பஸ்டில்டன் அவென்யூ இடையே விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் அந்த சாலை மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

வாஷிங்டன் ரீகன் தேசிய விமான நிலையம் அருகே பயணிகள் விமானமும் ராணுவ ஹெலிகாப்டரும் மோதிய விபத்தில் புதன்கிழமை இரவு 67 பேர் பலியாகினர்.

இந்த நிலையில், மற்றொரு பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.