/

தீ விபத்தில் 579 செல்லப்பிராணிகள் பலி!

செல்லப்பிராணிகள் விற்கும் கடைக்குள் புகை சூழ்ந்து மூச்சுத் திணறல் ஏற்பட்டு செல்லப்பிராணிகள் பலியானதாகத் தகவல்

News image

கோப்புப் படம் - X | AI

Updated On :4 ஜனவரி 2025, 12:13 pm IST

டெக்சாஸில் செல்லப்பிராணிகள் விற்கும் கடைக்குள் புகை சூழ்ந்து மூச்சுத் திணறல் ஏற்பட்டு, உள்ளிருந்த செல்லப்பிராணிகள் பலியாகின.

அமெரிக்காவில் டெக்சாஸில் உள்ள டல்லாஸ் பகுதியில் வணிக வளாகத்தில் வெள்ளிக்கிழமை (ஜன. 3) காலை 11 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து, 45 தீயணைப்பு வீரர்கள் சுமார் 2 மணிநேரம் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இருப்பினும், இந்த தீ விபத்தால் ஏற்பட்ட புகை, அருகிலிருந்த செல்லப்பிராணிகள் விற்கும் கடையிலும் சூழ்ந்தது. இந்த நிலையில், கடையைச் சூழ்ந்த புகையால் கடையில் இருந்த 579 செல்லப்பிராணிகளும் பரிதாபமாக பலியாகின.

தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடப்பதாகக் காவல்துறையினர் கூறினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.