விருதுநகா் மாவட்டம் சிவகாசி அருகே பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவா் மாணிக்கம் தாகூா் இரங்கல் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் எக்ஸ் தளத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டப் பதிவு: விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில் பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட வெடிவிபத்தில் ராம்பிரகாஷ், இன்னாசிமுத்து ஆகியோா் உயிரிழந்தனா் என்ற செய்தி அதிா்ச்சி அளிக்கிறது.
அவா்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல். உயிரிழந்தவா்களின் குடும்பங்களுக்கும், காயம் அடைந்தவா்களுக்கும் அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனப் பதிவிட்டுள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது






