சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

அரசு ஆதரவாளர்கள் மீது பயங்கரவாதத் தாக்குதல்! 21 பேர் பலி!

நைஜீரியாவில் சமூகக் கண்காணிப்பாளர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்

News image
கோப்புப் படம்
Updated On :12 ஜனவரி 2025, 4:54 am

DIN

நைஜீரியாவில் சமூகக் கண்காணிப்பாளர்களைக் குறிவைத்து, பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 21 பேர் பலியாகினர்.

நைஜீரியா நாட்டில் பயங்கரவாதிகள், கிளர்ச்சியாளர்களால் கட்ஸினா மாநிலம் தொடர்ந்து அச்சுறுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, பண்டிட்ஸ் எனும் பயங்கரவாதக் கும்பல் ஆள் கடத்தல், பள்ளிக் குழந்தைகளைக் கடத்தல், கொலை, கொள்ளை, பணம் பறிப்பு உள்ளிட்ட பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தக் கும்பலை ஒழிக்கும்வகையில் அந்நாட்டு ராணுவம் தொடர்ந்து தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. மேலும், பயங்கரவாதக் கும்பல்களை எதிர்த்து தாக்குதல் நடத்தும் சுமார் 2,000 பேர் கொண்ட கட்ஸினா சமூக கண்காணிப்புக் குழுவும் 2023 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது. பயங்கரவாதிகளை எதிர்த்துப் போராடுவதில், இவர்கள் கும்பல்களை எதிர்த்துப் போராடுவதில் இராணுவத்திற்கும் காவல்துறையினருக்கும் உதவி வருகின்றனர்.

இந்த நிலையில், கட்ஸினா சமூகக் கண்காணிப்புக் குழுவினரைக் குறிவைத்து, பயங்கரவாதிகள் சனிக்கிழமை தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் கண்காணிப்புக் குழுவினர்களில் 21 பேர் பலியாகினர்; மேலும், பலர் படுகாயமடைந்தனர். தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் விரைவில் கைது செய்யப்படுவர் என்று காவல் அதிகாரி உறுதியளித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.