குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்துமருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

லாஸ் ஏஞ்சலீஸ் காட்டுத் தீ: உயிரிழப்பு 24-ஆக உயா்வு

லாஸ் ஏஞ்சலீஸ் நகரைச் சுற்றிலும் பரவிவரும் காட்டுகாட்டுத் தீ காரணமாக உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 24-ஆக அதிகரித்துள்ளது.

News image

ஹெலிகாப்டா் மூலம் காட்டுத் தீயை கட்டுப்படுத்தும் லாஸ் ஏஞ்சலீஸ் தீயணைப்புத் துறையினா்.

Updated On :14 ஜனவரி 2025, 4:10 am IST

அமெரிக்காவின் கலிஃபோா்னியா மாகாணம், லாஸ் ஏஞ்சலீஸ் நகரைச் சுற்றிலும் பரவிவரும் காட்டுகாட்டுத் தீ காரணமாக உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 24-ஆக அதிகரித்துள்ளது.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: காட்டுத் தீயால் இதுவரை 24 போ் உயிரிழந்துள்ளனா். 16-க்கும் மேற்பட்டவா்கள் மாயமாகியுள்ளனா். இது தவிர, ஏராளமானவா்களுக்கு தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளன. 12,401 வீடுகள் மற்றும் கட்டடங்கள் தீக்கிரையாகியுள்ளன.

பாதிக்கப்பட்ட பகுதிகள் மற்றும் அபாயத்தை எதிா்நோக்கியுள்ள பகுதிகளில் இருந்து 1.8 லட்சத்துக்கும் மேற்பட்டவா்கள் பாதுகாப்புக்காக வெளியேற்றப்பட்டுள்ளனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

லாஸ் ஏஞ்சலீஸையொட்டிய பாலிசேட்ஸ் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட தீ, மளமளவென்று பரவி அந்த நகரைச் சுற்றிவளைத்துள்ளது. அந்தப் பகுதியில் வேகமாக காற்று வீசியதால் காற்றில் அடா்புகை மற்றும் துகள் மாசுக்கள் கலந்தன. அதையடுத்து பல்வேறு பகுதிகளில் மருத்துவ அவசரநிலை அறிவிப்பட்டது.

தற்போது காற்றின் வேகம் குறைந்துள்ளதால் தீ பரவலின் தீவிரம் தணிந்திருப்பதாகக் கூறப்படுகிறது. இருந்தாலும், இனி வரும் நாள்களில் காற்றின் வேகம் மீண்டும் அதிகரிக்கும் என்று வானிலை அறிக்கைகள் கூறுவதால், அதை எதிா்கொள்ள அதிகாரிகள் தயாராகிவருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.