அமெரிக்காவில் 538 பேர் கைது!

ராணுவ விமானங்கள் மூலம் நூற்றுக்கணக்கானோரை அமெரிக்கா நாடு கடத்தியது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

அமெரிக்காவில் ஐந்நூறுக்கும் மேற்படோரை அமெரிக்க அரசு கைது செய்தது.

அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற 4 நாள்களிலேயே சட்டவிரோதமாகக் குடியேறிய 538 பேரை அமெரிக்க அரசு கைது செய்தது; மேலும், ராணுவ விமானங்கள் மூலம் நூற்றுக்கணக்கானவர்களை நாடு கடத்தியுள்ளது.

இவர்களில் பெரும்பாலானோர் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டிருப்பதும் தெரிகிறது; பயங்கரவாத அமைப்பினர், பாலியல் குற்றவாளிகளும் இதில் அடங்குவர்.

இதுகுறித்து, வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கூறியது, ``வரலாற்றில் மிகப்பெரிய பெரிய நாடுகடத்தல் நடவடிக்கை நடக்கும் என்று தேர்தலின்போது வாக்குறுதி அளிக்கப்பட்டது. தற்போது அது நிறைவேற்றப்பட்டது’’ என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com