டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

மதநிந்தனைக் குற்றச்சாட்டு: பாகிஸ்தானில் 4 பேருக்கு மரண தண்டனை

பாகிஸ்தானில் மதநிந்தனை குற்றச்சாட்டின் பேரில் 4 பேருக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

News image
Updated On :27 ஜனவரி 2025, 10:21 pm

Din

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் மதநிந்தனை குற்றச்சாட்டின் பேரில் 4 பேருக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

இது குறித்து மதநிந்தனைப் பிரிவு அரசுத் தரப்பு வழக்குரைஞா்கள் திங்கள்கிழமை கூறியதாவது:

நபிகள் நாயம் மற்றும் புனித நூலை நிந்திக்கும் வகையில் இணையதளத்தில் பதிவுகள் வெளியிட்டமைக்காக நான்கு இளைஞா்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவா்கள் அனைவரும் ராவல்பிண்டியைச் சோ்ந்தவா்கள் என்று அவா்கள் தெரிவித்தனா்.

பாகிஸ்தானில் இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்தினால் அதற்கு அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்க சட்டம் வழிவகை செய்கிறது. எனினும், அந்தக் குற்றச்சாட்டில் பேரில் இதுவரை யாரும் தூக்கிலிடப்பட்டதில்லை.

எனினும், தனிப்பட்ட பகையைத் தீா்ப்பதற்கும், சிறுபான்மையினரை குறிவைப்பதற்கும் அந்த சட்டப்பிரிவு ப குற்றம் சாட்டப்படுகிறது. அவ்வாறு குற்றச்சாட்டுக்குள்ளானவா்கள் மதவெறிக் கும்பலால் கொடூரமாக அடித்துக் கொல்லப்படும் சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறி வருகின்றன.