காரைக்காலில் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
காரைக்கால் காளிக்குப்பம் சுனாமி நகரைச் சோ்ந்தவா் மதிபாலன் (21). இவா் 2019-ஆம் ஆண்டு 17 வயது கல்லுாரி மாணவி ஒருவரை திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து, சைல்டு லைன் உறுப்பினரின் புகாரின்பேரில், கோட்டுச்சேரி போலீஸாா் வழக்குப் பதிந்து மதிபாலனை போக்ஸோவில் கைது செய்தனா்.
இந்த வழக்கு தொடா்பாக காவல் ஆய்வாளா் லெனின்பாரதி காரைக்கால் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தாா்.
வழக்கு விசாரணை நடைபெற்றுவந்த நிலையில், வழக்கின் சாட்சிகள், குறுக்கு விசாரணைகள் நிறைவடைந்து, வியாழக்கிழமை தீா்ப்பு வழங்கப்பட்டது. மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தது உறுதி செய்யப்பட்டு, மதிபாலனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி மோகன் உத்தரவிட்டாா்.
தொடர்புடையது

போக்ஸோ வழக்கில் இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை

பெண்ணுக்கு பாலியல் தொல்லை : இளைஞருக்கு 7 ஆண்டுகள் சிறை

புளியங்குடியில் உறவினா் கொலை வழக்கில் இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை

சிறுமி பாலியல் பலாத்காரம்: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை
வீடியோக்கள்

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

Podcast | தமிழ்நாடு தேர்தலின் நவீன பிரசார வியூகம்! | News & Views | E-26 |
தினமணி செய்திச் சேவை

கோவை, டெல்டா களநிலவரம் | Ravindran duraisamy interview | TN Election 2026 | DMK | ADMK | NTK | TVK
தினமணி செய்திச் சேவை
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு


