டாடா குழுமத் தலைவராக சந்திரசேகரன் தொடர்வார்! முடிவை மாற்றிய நிர்வாகக் குழு!இன்று கல்வி, நாளை வேறாக இருக்கலாம்! மனநிலையை மாற்ற தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை!நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!மதுரை எய்ம்ஸ் புறநோயாளிகள் பிரிவு ஜனவரி 1 முதல் தொடக்கம்! பெரியார் பிறந்த நாள்: மு.க. ஸ்டாலின் மரியாதை! சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு!சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக வாழ்ந்தவர் பெரியார்! அண்ணாமலை புகழாரம்!முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் காலமானார்!

சிரியா உள்நாட்டு மோதலுக்கு புதிய போர்நிறுத்தம் அறிவிப்பு! வெளியேறும் அரசுப் படைகள்!

சிரியாவில் ஸ்வேடா மாகாணத்தில் மீண்டும் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளதைப் பற்றி...

துரூஸ் ஆயுதக் குழுவுடனான மோதல்களுக்கு புதியதாக மற்றொரு போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. - ஏபி

Published On :

சிரியா நாட்டின் ஸ்வேடா மாகாணத்தில், துரூஸ் இன ஆயுதக்குழுவுடனான மோதல்களுக்கு, புதியதாக போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளதால், அங்கிருந்து அரசுப் படைகள் வெளியேறி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

துரூஸ் இனமக்கள் அதிகம் வசிக்கக் கூடிய ஸ்வேடா மாகாணத்தில், அந்த இனத்தைச் சேர்ந்த ஆயுதக்குழுவும், பொதூயின் ஆயுதக் குழுவினரும் தொடர்ந்து மோதல்களில் ஈடுபட்டு வந்தனர். இத்தகையச் சூழலில், மோதலைக் கட்டுப்படுத்த சிரியாவின் இடைக்கால அரசின் ராணுவப் படைகள் ஸ்வேடா நகரத்தினுள் நுழைந்தனர்.

இதனைத் தொடர்ந்து, துரூஸ் ஆயுதக் குழுவுக்கும், சிரியா ராணுவத்துக்கும் இடையில் மோதல்கள் தொடங்கியது. இதில், துருஸ் குழுக்களுக்கு ஆதரவாக இஸ்ரேல் ராணுவம் களமிறங்கி சிரியா ராணுவத்தின் மீது தாக்குதல்கள் நடத்தியது.

இந்நிலையில், டமாஸ்கஸ் நகரத்திலுள்ள ராணுவத் தலைமையகத்தின் மீது, நேற்று (ஜூலை 16) இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, அமெரிக்கா, துருக்கி மற்றும் அரபு நாடுகளின் தலைமையில், சிரியாவின் இடைக்கால அரசின் அதிகாரிகள் மற்றும் துரூஸ் இனத் தலைவர்கள் இடையில் புதிய போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இந்தப் போர்நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்வதாக சிரியாவின் உள்துறை அமைச்சகம் மற்றும் துரூஸ் மதத் தலைவர்கள் விடியோ வெளியிட்டதாகக் கூறப்படுகிறது.

இருப்பினும், கடந்த ஜூலை 15 ஆம் தேதி அன்று கொண்டுவரப்பட்ட முந்தைய போர்நிறுத்த ஒப்பந்தம் உடனடியாகக் கைவிடப்பட்டதால், தற்போது இந்தப் போர்நிறுத்தமானது நீடிக்குமா எனும் சந்தேகம் எழுந்துள்ளது.

இந்நிலையில், போர்நிறுத்தம் தற்போது வரை அமலில் உள்ளதால், ஸ்வேடா மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட ராணுவ நடவடிக்கைகள் கைவிடப்பட்டு அங்கிருந்து, நேற்று (ஜூலை 17) இரவு முதல் அரசுப் படைகள் வெளியேறி வருகின்றன.

முன்னதாக, துருஸ் இனக்குழுவும், பொதூயின் ஆயுதக்குழுவும் தொடர்ந்து பரஸ்பர தாக்குதல்களிலும், ஆள் கடத்தல்களிலும் ஈடுபட்டு வந்தது மோதலாக உருவானது. இந்த மோதல்களில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையை சிரியா அரசு இதுவரையில் வெளியிடவில்லை.

ஆனால், இந்த மோதல்கள் மற்றும் இஸ்ரேலின் தாக்குதல் ஆகியவற்றால் சுமார் 374 பேர் கொல்லப்பட்டிருக்கக் கூடும் என மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.