27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

சிரியா உள்நாட்டு மோதலுக்கு புதிய போர்நிறுத்தம் அறிவிப்பு! வெளியேறும் அரசுப் படைகள்!

சிரியாவில் ஸ்வேடா மாகாணத்தில் மீண்டும் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளதைப் பற்றி...

News image

துரூஸ் ஆயுதக் குழுவுடனான மோதல்களுக்கு புதியதாக மற்றொரு போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. - ஏபி

Updated On :17 ஜூலை 2025, 6:37 pm IST

சிரியா நாட்டின் ஸ்வேடா மாகாணத்தில், துரூஸ் இன ஆயுதக்குழுவுடனான மோதல்களுக்கு, புதியதாக போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளதால், அங்கிருந்து அரசுப் படைகள் வெளியேறி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

துரூஸ் இனமக்கள் அதிகம் வசிக்கக் கூடிய ஸ்வேடா மாகாணத்தில், அந்த இனத்தைச் சேர்ந்த ஆயுதக்குழுவும், பொதூயின் ஆயுதக் குழுவினரும் தொடர்ந்து மோதல்களில் ஈடுபட்டு வந்தனர். இத்தகையச் சூழலில், மோதலைக் கட்டுப்படுத்த சிரியாவின் இடைக்கால அரசின் ராணுவப் படைகள் ஸ்வேடா நகரத்தினுள் நுழைந்தனர்.

இதனைத் தொடர்ந்து, துரூஸ் ஆயுதக் குழுவுக்கும், சிரியா ராணுவத்துக்கும் இடையில் மோதல்கள் தொடங்கியது. இதில், துருஸ் குழுக்களுக்கு ஆதரவாக இஸ்ரேல் ராணுவம் களமிறங்கி சிரியா ராணுவத்தின் மீது தாக்குதல்கள் நடத்தியது.

இந்நிலையில், டமாஸ்கஸ் நகரத்திலுள்ள ராணுவத் தலைமையகத்தின் மீது, நேற்று (ஜூலை 16) இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, அமெரிக்கா, துருக்கி மற்றும் அரபு நாடுகளின் தலைமையில், சிரியாவின் இடைக்கால அரசின் அதிகாரிகள் மற்றும் துரூஸ் இனத் தலைவர்கள் இடையில் புதிய போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இந்தப் போர்நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்வதாக சிரியாவின் உள்துறை அமைச்சகம் மற்றும் துரூஸ் மதத் தலைவர்கள் விடியோ வெளியிட்டதாகக் கூறப்படுகிறது.

இருப்பினும், கடந்த ஜூலை 15 ஆம் தேதி அன்று கொண்டுவரப்பட்ட முந்தைய போர்நிறுத்த ஒப்பந்தம் உடனடியாகக் கைவிடப்பட்டதால், தற்போது இந்தப் போர்நிறுத்தமானது நீடிக்குமா எனும் சந்தேகம் எழுந்துள்ளது.

இந்நிலையில், போர்நிறுத்தம் தற்போது வரை அமலில் உள்ளதால், ஸ்வேடா மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட ராணுவ நடவடிக்கைகள் கைவிடப்பட்டு அங்கிருந்து, நேற்று (ஜூலை 17) இரவு முதல் அரசுப் படைகள் வெளியேறி வருகின்றன.

முன்னதாக, துருஸ் இனக்குழுவும், பொதூயின் ஆயுதக்குழுவும் தொடர்ந்து பரஸ்பர தாக்குதல்களிலும், ஆள் கடத்தல்களிலும் ஈடுபட்டு வந்தது மோதலாக உருவானது. இந்த மோதல்களில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையை சிரியா அரசு இதுவரையில் வெளியிடவில்லை.

ஆனால், இந்த மோதல்கள் மற்றும் இஸ்ரேலின் தாக்குதல் ஆகியவற்றால் சுமார் 374 பேர் கொல்லப்பட்டிருக்கக் கூடும் என மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.