கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!சென்னை போரூர் அருகே இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை!பிரிட்டனில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை!முக்கிய நிறுவன ஸ்மார்ட்போன்களின் விலை ஏற்றம்! எவ்வளவு உயர்ந்தது?தில்லியை தாக்கிய புழுதிப் புயல்! சிவப்பு எச்சரிக்கை விடுப்பு!அடுத்த 3 மணி நேரத்தில் 22 மாவட்டங்களில் மழை!
/

லெபனான், சிரியா, காஸாவிலுள்ள படைகளைத் திரும்பப் பெறமாட்டோம்: இஸ்ரேல்

அமெரிக்கா - ஈரான் இடையேயான அமைதி ஒப்பந்தம் பற்றி இஸ்ரேல் தெரிவித்தவை.

News image

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு - AP

Updated On :15 ஜூன் 2026, 6:22 pm IST

லெபனான், சிரியா, காஸா பகுதிகளிலுள்ள இஸ்ரேல் ராணுவப் படைகளைத் திருமப் பெறமாட்டோம் என இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, ஹோர்முஸ் நீரிணையில் இருந்த தங்களது படைகளை அமெரிக்க ராணுவம் திரும்பப் பெற்றது.

இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களில் இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், “ பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் நானும் ஒரு தெளிவான கொள்கையைப் பின்பற்றி வருகிறோம். அதன்படி, பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக இஸ்ரேலையும், இஸ்ரேல் மக்களையும் பாதுகாக்கும் விதமாக லெபானான், சிரியா, காஸா பகுதிகளின் பாதுகாப்பு மண்டலங்களில் உள்ள இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் அந்தப் பகுதிகளிலேயே காலவரையின்றி நிலைநிறுத்தப்படும்.

அந்தப் பகுதிகளிலுள்ள பொதுமக்கள் வெளியேற்றப்படுவார்கள். பொதுமக்கள் வசிக்கும் கிராமங்கள் உள்பட பயங்கரவாதிகள் இருக்கும் அனைத்துக் கட்டமைப்புகளும் அழிக்கப்படும்.

நிலப்பரப்பைத் தக்கவைப்பதும், பாதுகாப்பு மண்டலங்களைப் பராமரிப்பதும் இஸ்ரேலிய பாதுகாப்புப் படையின் மிகப்பெரிய சாதனைகளில் அடங்கும். எனவே, லெபனானின் படைகளைத் திரும்பப் பெறுவதற்கு தற்போதுள்ள அல்லது வரவிருக்கும் அனைத்து அழுத்தங்களையும் நாங்கள் எதிர்ப்போம்" என்று காட்ஸ் தெரிவித்தார்.

மேலும், "இஸ்ரேலின் பாதுகாப்பு மற்றும் குடிமக்களின் பாதுகாப்பில் நாங்கள் எந்த சமரசமும் செய்துகொள்ள மாட்டோம். அதேபோல, பாதுகாப்பு மண்டலங்களிலிருந்து பின்வாங்கவும் மாட்டோம்.

லெபனான் நடைபெறும் நிகழ்வுகளைக் காரணம் காட்டி இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தினால், எங்களின் முழு பலத்துடன் ஈரான் மீது நாங்கள் தாக்குதல் நடத்துவோம்” என்றும் அறிக்கையில் கூறியிருந்தார்.

இதுபற்றி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பிடம் நெதன்யாகு தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

இஸ்ரேலின் தீவிர வலதுசாரி தேசியப் பாதுகாப்பு அமைச்சர் இட்டாமர் பென் கிவிர், மத்தியக் கிழக்கு போரை முடிவுக்கு கொண்டுவர ஈரானுடன் அமெரிக்கா செய்துகொண்ட ஒப்பந்தத்தைக் கண்டித்ததோடு, இஸ்ரேலுக்கு அதில் உடன்பாடில்லை என்றும் தெரிவித்திருந்தார்.

Summary

We will not withdraw forces from Lebanon, Syria, and Gaza: Israel

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.