பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தில், அந்நாட்டு பயங்கரவாதத் தடுப்புப் படையினர் மேற்கொண்ட நடவடிக்கைகளில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
கைபர் பக்துன்குவா மாகாணத்தின், ஹாங்கு மாவட்டத்தின் ஷினாவாரி சர்காரி பகுதியில், பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளதாக, அந்நாட்டு பாதுகாப்புப் படையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் இன்று (ஜூலை 19) பயங்கரவாதிகளுக்கு எதிரான கூட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
இதில், 5 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதுடன், ராணுவ மேஜர் ஒருவர் படுகாயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, உடனடியாக அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இருப்பினும், அப்பகுதிகளில் தொடர்ந்து பாதுகாப்புப் படையினர் தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக, அந்நாட்டு அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனால், அங்குள்ள பல்வேறு இடங்களில் பாதுகாப்புகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இதையும் படிக்க: நேரலையில் பேசிய செய்தியாளர் வெள்ளத்தில் மாயம்? விடியோ வைரல்!
Summary
Five terrorists were killed in an operation by counter-terrorism forces in Pakistan's Khyber Pakhtunkhwa province.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஈரான் - அமெரிக்கா பேச்சு பாகிஸ்தானில் தொடக்கம்!

பாகிஸ்தானில் தடை செய்யப்பட்ட இயக்கத்தைச் சேர்ந்த 6 பேர் கொலை!

லஷ்கர் பயங்கரவாதிகள் 3 பேர் பாகிஸ்தானில் கொலை!

பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினரால் 8 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு


