தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

அமெரிக்காவில் சட்டத்தை மீறினால் வாழ்நாள் முழுமைக்கும் ‘விசா’ ரத்து: புது எச்சரிக்கை!

அமெரிக்காவில் வெளிநாட்டவர்களால் அச்சுறுத்தல் ஏற்படுவதை ஏற்றுக்கொள்ளவே முடியாது.!

News image
Updated On :26 ஜூலை 2025, 1:31 pm

இணையதளச் செய்திப் பிரிவு

அமெரிக்காவுக்குச் சென்றுள்ள வெளிநாட்டவர்கள் சட்டத்தை மீறினாலோ அல்லது குற்றச்செயல்களில் ஈடுபட்டாலோ வாழ்நாள் முழுமைக்கும் ‘விசா’ ரத்து செய்யப்படும் என்று புது எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, இந்தியாவுக்கான அமெரிக்க தூதரகம் சனிக்கிழமை(ஜூலை 26) வெளியிட்டுள்ள சமூக ஊடகப் பதிவில், ‘சட்டம் - ஒழுக்கத்தை முறையாகக் கடைப்பிடிக்கும் சமூகமாக அமெரிக்கா உள்ளது. இந்தநிலையில், வெளிநாட்டவர்களால் இங்கு அச்சுறுத்தல் ஏற்படுவதை ஏற்றுக்கொள்ளவே முடியாது.

ஆகவே, வெளிநாட்டவர்கள் சட்டத்தை மீறினால் அவர்களின் ‘விசா’ ரத்து செய்யப்படும்; திரும்ப அமெரிக்காவுக்குள் நுழையவே முடியாது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.