
அமெரிக்காவுக்குச் சென்றுள்ள வெளிநாட்டவர்கள் சட்டத்தை மீறினாலோ அல்லது குற்றச்செயல்களில் ஈடுபட்டாலோ வாழ்நாள் முழுமைக்கும் ‘விசா’ ரத்து செய்யப்படும் என்று புது எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, இந்தியாவுக்கான அமெரிக்க தூதரகம் சனிக்கிழமை(ஜூலை 26) வெளியிட்டுள்ள சமூக ஊடகப் பதிவில், ‘சட்டம் - ஒழுக்கத்தை முறையாகக் கடைப்பிடிக்கும் சமூகமாக அமெரிக்கா உள்ளது. இந்தநிலையில், வெளிநாட்டவர்களால் இங்கு அச்சுறுத்தல் ஏற்படுவதை ஏற்றுக்கொள்ளவே முடியாது.
ஆகவே, வெளிநாட்டவர்கள் சட்டத்தை மீறினால் அவர்களின் ‘விசா’ ரத்து செய்யப்படும்; திரும்ப அமெரிக்காவுக்குள் நுழையவே முடியாது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.