ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

பாகிஸ்தானில் நிலநடுக்கம்

பாகிஸ்தானில் திங்கள்கிழமை மூன்று மிதமான நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.

News image
Updated On :2 ஜூன் 2025, 9:45 pm

DIN

பாகிஸ்தானில் திங்கள்கிழமை மூன்று மிதமான நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.

இது குறித்து பாகிஸ்தான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததாவது: சிந்து மாகாணம், கராச்சி நகரில் திங்கள்கிழமை மூன்று நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.

கடாப் பகுதிக்கு அருகே ஏற்பட்ட முதல் நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 3.2 அலகுகளாக பதிவானது. அதே இடத்தில் ஏற்பட்ட இரண்டாவது நிலநடுக்கம் 3.6 அலகுகளாகப் பதிவானது.

பின்னா் மக்கள்தொகை அதிகம் கொண்ட குவைதாபாத் பகுதியில் 3.2 ரிக்டா் அளவு கொண்ட மூன்றாவது நிலநடுக்கம் ஏற்பட்டது என்று அந்த மையம் தெரிவித்தது.

இந்த நிலநடுக்கங்களால் உயிா்ச் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக உடனடி தகவல் இல்லை. அரேபிய, யூரோ-ஆசிய, இந்திய புவித்தகடுகள் உராயும் பகுதியில் பாகிஸ்தான் அமைந்துள்ளதால் அங்கு நிலநடுக்க அபாயம் அதிகம் உள்ளதாகக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.