அடிஸ் அபாபா, எத்தியோப்பியா/ஜெனிவா போன்ற தென்னாப்ரிக்க நாடுகளின் முக்கிய நகரங்களை மிக மோசமான வானிலை மற்றும் காலநிலை மாற்றங்கள், ஒவ்வொரு அணுவையும் அசைத்துப் பார்த்து வருகிறது.
ஆப்ரிக்க நாட்டின் இது, சமூக-பொருளாதார சமநிலையை புரட்டிப்போட்டிருப்பதோடு, அந்நாட்டில் நிலவும் கடுமையான வறட்சியால் பசி, பட்டினி, பாதுகாப்பின்மை, மக்கள் அகதிகளாக பல இடங்களுக்கு இடம்பெயர்தல் போன்றவை அதிகரித்திருப்பதாக உலக வானிலை அமைப்பு (WMO) வெளியிட்ட ஆப்பிரிக்காவின் காலநிலை 2024 அறிக்கை பயமுறுத்துகிறது.
அப்படி என்ன நடக்கிறது?
வரலாற்றில் இல்லாத அளவுக்கு கடந்த பத்தாண்டுகளில் மிக வெப்பமான 2024.
2024 கடற்பரப்பின் வெப்பம் அதிகரிப்பு
ஒருபக்கம் வறட்சி, மறுபக்கம் வெள்ளம் உயிர்களையும் வாழ்வாதாரங்களையும் சீரழிக்கிறது.
இயற்கையை ஆட்டிப்படைக்கும் எல் நினோ இதன் பின்னணியில் இருப்பதாகத் தகவல்.
ஆப்பிரிக்க நாட்டின் காலநிலை மாற்றம் குறித்த அறிக்கை, உடனடியாக உலகம் வெப்பமயமாதலைக் கட்டுப்படத்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதாக உலக வானிலை அமைப்பின் பொதுச் செயலர் செலஸ்டே சௌலோ தெரிவித்துள்ளார்.
மிக மோசமான வானிலை காரணமாக, கனமழை பெய்து, பெருவெள்ளம் ஏற்பட்டு பேரழிவும், மழையின்றி, வறட்சி, தண்ணீர்பஞ்சலும் பல நாடுகளின் நிலையாக உள்ளது.
ஆப்ரிக்காவில் தற்போது மீள்தன்மையை உருவாக்க, தேவையான முயற்சிகளை வலுப்படுத்த, அனைத்து நாடுகளின் பிரதிநிதிகளும் இணைந்து பணியாற்ற உறுதி ஏற்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை, வேளாண்மை, சுற்றுச்சூழலில் இருக்கும் சவால்களையும், உணவு, குடிநீர், எரிபொருள் பாதுகாப்பு, சுகாதாரம், கல்வி ஆகியவற்றை உறுதி செய்வதில் இருக்கும் சிக்கல்களையும் எடுத்துரைக்கிறது. ஆனால், அதே வேளையில், இருக்கும் வாய்ப்புகள் மற்றும் சவால்களை எதிர்கொள்ளத் தேவையான ஆயுதங்களையும் அது எடுத்துரைக்கிறது.
ஆப்ரிக்காவின் பெரும் பகுதிகளை 2024ஆம் ஆண்டு வெப்ப அலைகள் தாக்கியிருக்கின்றன. இதன் தரை வெப்பம் 1991ஆம் ஆண்டு முதல் மெதுவாக அதிகரிக்கத் தொடங்கி பிறகு வேகமாக உயர்ந்து வருகிறது. 2023ஆம் ஆண்டில், கடல் பரப்பின் வெப்பம் கடுமையாக இருந்துள்ளது.
இவை அனைத்துமே கவலையளிக்கும் வகையில் இருப்பதை இயற்கை ஆர்வலர்களும் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
போட்டியால் உருவாகும் புது உலகம்!

வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதிக்கான போட்டியில் நீடிக்கும் தென்னாப்பிரிக்கா!

டி20 உலகக் கோப்பை: தென்னாப்பிரிக்காவுக்கு 118 ரன்கள் இலக்கு!

நாக் அவுட் சுற்றுக்கு முதல்முறையாக முன்னேறி, வரலாறு படைத்தது தென்னாப்பிரிக்கா!
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview



