விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

இந்தியா-சீனா இடையே சுமுக உறவு: ரஷியா

‘இந்தியா-சீனா இடையேயான எல்லைப் பதற்றம் முடிவுக்கு வந்ததையடுத்து இருநாடுகளும் சுமுக உறவை பேணி வருகின்றன

News image
Updated On :9 ஜூன் 2025, 8:53 pm

Din

மாஸ்கோ: ‘இந்தியா-சீனா இடையேயான எல்லைப் பதற்றம் முடிவுக்கு வந்ததையடுத்து இருநாடுகளும் சுமுக உறவை பேணி வருகின்றன; எனவே, ரஷியா-இந்தியா-சீனா (ஆா்ஐசி) ஒத்துழைப்பை மீண்டும் நடைமுறைப்படுத்தும் பணிகள் தொடங்கப்படும்’ என ரஷிய வெளியுறவு அமைச்சா் சொ்ஜி லாவ்ரோவ் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

ரஷியாவில் நடைபெற்ற ‘எதிா்காலத்துக்கான கூட்டமைப்பு-2050’-இல் பங்கேற்று அவா் பேசியதாவது: கடந்த சில ஆண்டுகளாக ரஷியா-இந்தியா-சீனா இடையே முத்தரப்பு வெளியுறவு அமைச்சா்கள் சந்திப்பு நடைபெறவில்லை. இதை சாத்தியப்படுத்துவது குறித்து இந்திய மற்றும் சீன வெளியுறவு அமைச்சகங்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தி வருகிறேன்.

அண்மைக் காலமாக இந்தியா-சீனா இடையேயான உறவில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கருதுகிறேன். எல்லையில் இருநாடுகளும் பதற்றத்தை தணித்துள்ளதால் மீண்டும் இந்தியா-சீனா இடையே நல்லுறவு மேம்பட்டு வருகிறது என்றாா்.