ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

அதிபர் டிரம்ப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு - பாகிஸ்தான் அரசு பரிந்துரை!

அமெரிக்க அதிபருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க பாகிஸ்தான் பரிந்துரைத்துள்ளது.

News image
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்
Updated On :21 ஜூன் 2025, 6:51 am

DIN

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு 2026 ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப் பரிந்துரைப்பதாக பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.

பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய இருநாடுகளுக்கும் இடையிலான போரை தான் நிறுத்தியதாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து குறிப்பிட்டு வருகின்றார்.

இருப்பினும், அந்தத் தாக்குதல்களை பாகிஸ்தான் அரசு கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் நிறுத்தியதாக இந்திய அரசு அறிவித்துள்ளது. ஆனால், இந்தப் போரை நிறுத்தியதற்கு பாகிஸ்தான் அரசு அதிபர் டிரம்ப்புக்கு நன்றி தெரிவித்துள்ளது.

இந்தச் சூழலில், கடந்த சில நாள்களுக்கும் முன்பு அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையில், அவரை பாகிஸ்தான் ராணுவ தளபதி அசீம் முனீர் சந்தித்தார்.

இந்தச் சந்திப்புக்கு பின்னர், இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போரை நிறுத்தியதற்காக அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

இதனைத் தொடர்ந்து, ”பாகிஸ்தான் அரசு அதிபர் டொனால்ட் ஜே டிரம்ப்புக்கு 2026 ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப் பரிந்துரைக்கிறது”, என எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்தப் பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:

“இந்தியா - பாகிஸ்தான் இடையிலான மோதலில், அவரது தார்மீக தலையீடு, முக்கிய தலைமைப் பண்பு ஆகியவற்றை அங்கீகரித்து, அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு 2026 ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு வழங்க, பாகிஸ்தான் அரசு முறையாகப் பரிந்துரைக்கின்றது” எனக் கூறப்பட்டுள்ளது.

தொடர்ந்து, அதிபர் டிரம்ப்புக்கு புகழாரம் சூட்டிய பாகிஸ்தான், ஜம்மு - காஷ்மீர் விவகாரத்தில் தீர்வுக்காண அவரது நேர்மையான ஒத்துழைப்பை அங்கீகரிப்பதாகவும் கூறியுள்ளது.

முன்னதாக, இந்தியா - பாகிஸ்தான் போன்ற பல நாடுகளுக்கு இடையிலான மோதல்களையும் பதட்டத்தையும் தணிக்க உதவிய தனக்கு நோபல் பரிசு கிடைக்காது என அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது ஆதங்கத்தைத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.