
இஸ்ரேல் - ஈரான் போரினைத் தொடர்ந்து, தற்போது யேமன் நாடும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
காஸா மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேலின் தாக்குதலுக்கு, யேமன் நாட்டில் உள்ள (ஈரான் ஆதரவு பெற்ற) ஹவுதி பயங்கரவாத அமைப்பானது எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த நிலையில், காஸாவுக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது யேமன் தாக்குதல் நடத்தி வருகிறது.
இருப்பினும், யேமன் செலுத்தும் ஏவுகணைகளையும், ட்ரோன்களையும் இடைமறித்து, சுட்டு வீழ்த்தியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது.
இஸ்ரேல் - ஈரான் போரின்போதும், ஈரானுக்கு ஆதரவு தெரிவித்த ஹவுதி அமைப்பு, செங்கடல் வழியாகச் செல்லும் அமெரிக்க சரக்கு மற்றும் போர்க் கப்பல்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இதையும் படிக்க: பைசா செலவில்லாமல் விண்வெளி சென்ற ராகேஷ் சர்மா! சுபான்ஷு சுக்லாவுக்கு ரூ.544 கோடி செலவு ஏன்?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.