மார்ச் 31 ஆம் தேதிக்குள் ஆப்கானிஸ்தான் நாட்டினர் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று பாகிஸ்தான் கேட்டுக்கொண்டுள்ளது.
இதுகுறித்து ஏஆர்ஒய் செய்திகளின்படி, ஆப்கானிஸ்தான் குடியுரிமை அட்டை வைத்திருப்பவர்கள் தாங்களாகவே நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.
இல்லையெனில் அவர்கள் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் நாடு கடத்தப்படுவார்கள். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் ஆப்கன் நாட்டினர் நாட்டை விட்டு வெளியேற போதுமான கால அவகாசம் வழங்கியுள்ளதாக பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. முன்னதாக, ஆப்கன் நாட்டினரை வெளியேற்ற பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளதாக கடந்த சில நாள்களாக தகவல்கள் வெளியாகி வந்தன.
ஆனால் இந்த தகவலை அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியது இதுவே முதல் முறை என்று ஏஆர்ஒய்(ARY) செய்திகள் தெரிவிக்கின்றன.
இதனிடையே அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் கடந்த மாதம் பொறுப்பேற்றதும், அந்நாட்டில் இருந்து சட்டவிரோத குடியேறிகளை நாடு கடத்தும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
புழுங்கல் அரிசி தேங்காய் அடை

ஜூன் 14 முதல் 24 க்குள் கிரேட்டா் பெங்களூரு ஆணைய தோ்தல்

மோதலால் எதையும் சாதிக்க முடியாது என்பதை பாகிஸ்தான் உணர வேண்டும்- ஃபரூக் அப்துல்லா அறிவுரை

வந்தே மாதரத்தை எதிர்ப்பவர்கள் நாட்டை விட்டு வெளியேறுங்கள்!
விடியோக்கள்
நெருங்கும் பிளே ஆஃப் சுற்று: 8 அணிகளுக்கு நடுவில்தான் போட்டி! | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | இண்டியா கூட்டணி எதிர்காலம்: திமுக முன் உள்ள வாய்ப்புகள் என்ன? | News and Views | Epi - 33
தினமணி செய்திச் சேவை

விமர்சனங்களைத் தாண்டி வென்று காட்டிய விஜய் TVK Vijay | CM Vijay | MK Stalin | Edapadi Palaniswami
தினமணி செய்திச் சேவை

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

