அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!1984 கலவர வழக்கு காங். முன்னாள் எம்.பி சஜ்ஜன் குமார் காலமானார்!நெல்லையில் 4 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த மதபோதகருக்கு மரண தண்டனை! நீட் விலக்கு, ஒசூரிலிருந்து மெட்ரோ ரயில்! முதல்வர் விஜய் பேச்சுமனசாட்சியே இல்லாத நிறுவனம் என்.எல்.சி.! செளமியா அன்புமணி காட்டம்! நெல்லையில் 4 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த மதபோதகருக்கு மரண தண்டனை!தில்லியில் பாகிஸ்தான் தூதரகத்தின் ஆக்கிரமிப்புகளை இடித்த மத்திய அரசு!‘ஒண்டிவீரன் புகழ் என்றும் நிலைத்தோங்கட்டும்’: முதல்வர் விஜய் புகழஞ்சலிதங்கம் விலை மீண்டும் அதிரடி உயர்வு! அமெரிக்காவில் விமானம் - காவல்துறை ஹெலிகாப்டர் மோதி விபத்து!அமித் ஷா தலைமையில் தென் மாநில முதல்வர்கள் மாநாடு தொடங்கியது!

அமெரிக்காவில் டெஸ்லா கார்களுக்கு தீ வைப்பு; உள்ளூர் பயங்கரவாதம் என எலான் மஸ்க் கண்டனம்!

அமெரிக்காவில் டெஸ்லா கார்களுக்கு தீ வைப்புச் சம்பவங்கள் அதிகரிப்பு

எலான் மஸ்க்

Published On :20 மார்ச் 2025, 5:51 pm IST

அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளிலும் டெஸ்லா கார்களுக்கும், கார் சேவை மையங்களுக்கும் தீ வைப்புச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. சில இடங்களில் துப்பாக்கிச் சூடு சம்பவங்களும் நடந்திருக்கும் நிலையில், இதனை உள்ளூர் பயங்கரவாதம் என எலான் மஸ்க் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் பல டெஸ்லா வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவங்களும் கார்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவங்களும், நள்ளிரவில் டெஸ்லா கார் சேவை மையங்களுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவங்களும் அதிகரித்துள்ளதாக சிஎன்என் செய்தி தெரிவிக்கிறது.

டெஸ்லா கொலிஷன் சென்டரில் தீ வைக்கப்பட்ட சம்பவத்தில் அங்கிருந்த ஐந்து வாகனங்கள் முற்றிலும் எரிந்து நாசமானது.

இந்த சம்பவங்களை விசாரித்து வரும் அமெரிக்க எஃப்பிஐ அதிகாரிகள், இது சில பயங்கரவாத சக்திகளின் பங்கு இருக்கலாம் என்று தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

வாகன சேவை மையத்தின் உரிமையாளர் இதுபற்றி கூறுகையில் மதுபானம் ஊற்றப்பட்டு, மீது துப்பாக்கியால் சுடப்பட்டதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். டெஸ்லா சேவை மையத்தின் முகப்புக் கதவில் எதிர்ப்பு என்ற வார்த்தை எழுதப்பட்டிருந்ததாகவும் விசாரணை தொடங்கியிருக்கிறது. எஃப்பிஐ அதிகாரிகளுடன் பயங்கரவாத அதிரடிப் படையினரும் இணைந்து விசாரித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

டெஸ்லா அமைப்புகளை குறி வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதர்கவும், இது தொடர்பான விடியோக்களில், கார்கள் எரிந்துகொண்டிருக்கும்போது, குற்றவாளி என சந்தேகிக்கப்படும் நபர் கருப்பு நிற உடையில் கார்களுக்கு இடையே ஒரு பையுடன் நடந்து செல்வது பதிவாகியிருப்பதாகக் கூறப்படுகிறது.

தீயணைப்புப் படையினர் வருவதற்குள், வாகனத்தின் பேட்டரிகளுக்கு தீ பரவியதால், சில வாகனங்கள் முற்றிலும் எரிந்துவிட்டதாகவும் காவல்துறையினர் கூறுகிறார்கள்.

இந்த தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவித்திருக்கும் டெஸ்லா தலைமை செயல் நிர்வாகி எலான் மஸ்க், இதனை பயங்கரவாதம் என்று குறிப்பிட்டிருப்பதோடு, இதுபோன்ற வன்முறைகள் முட்டாள்தனமானது மற்றும் மிகவும் தவறானது என்றும் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.