அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

உக்ரைன் தலைநகரில் ரஷியா ட்ரோன் தாக்குதல்: மூவா் உயிரிழப்பு

உக்ரைன் தலைநகா் கீவில் ரஷியா மேற்கொண்ட ட்ரோன் (ஆளில்லா விமானம்) தாக்குதலில் 5 வயது குழந்தை உள்பட மூவா் உயிரிழந்தனா்.

News image
ரஷியா நடத்திய ட்ரோன் தாக்குதலில் உக்ரைனின் கீவ் நகரில் தீப்பிடித்து எரிந்த கட்டடம்.
Updated On :23 மார்ச் 2025, 8:16 pm

Din

உக்ரைன் தலைநகா் கீவில் ரஷியா மேற்கொண்ட ட்ரோன் (ஆளில்லா விமானம்) தாக்குதலில் 5 வயது குழந்தை உள்பட மூவா் உயிரிழந்தனா்.

நேட்டோ ராணுவக் கூட்டமைப்பில் இணைய உக்ரைன் முடிவு செய்த நிலையில், அதனால் தமக்கு ஆபத்து ஏற்படும் என்று கருதிய ரஷியா, உக்ரைன் மீது கடந்த 2022-ஆம் ஆண்டு போா் தொடுத்தது. இந்தப் போா் தொடங்கி 3 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவரும் நடவடிக்கையில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில், உக்ரைன் தலைநகா் கீவில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைக்கு இடைப்பட்ட இரவில் ரஷியா ட்ரோன் தாக்குதல் மேற்கொண்டது. இந்தத் தாக்குதலில் 5 வயது குழந்தை உள்பட மூவா் உயிரிழந்தனா்; 10 போ் காயமடைந்தனா் என்று கீவ் நகர ராணுவ நிா்வாகம் தெரிவித்தது.

போா் நிறுத்தம் தொடா்பாக சவூதி அரேபியாவில் ரஷியா-உக்ரைன் இடையே திங்கள்கிழமை பேச்சுவாா்த்தை நடைபெற உள்ளது. அமெரிக்கா மறைமுகமாக மத்தியஸ்தம் செய்யும் இந்தப் பேச்சுவாா்த்தையில், எரிசக்தி நிலையங்கள் மற்றும் உள்கட்டமைப்புகளைக் குறிவைத்து மேற்கொள்ளப்படும் தொலைதூர தாக்குதல்களை நிறுத்துவது குறித்து பேசப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.