எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

டிரம்ப் இல்லாமல் சாத்தியமில்லை: சுனிதா வில்லியம்ஸ் மீட்பு குறித்து நாசா கருத்து!

டிரம்ப் நிர்வாகத்துக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றிகளில் ஒன்று இது என நாசா பாராட்டு.

News image

சுனிதா வில்லியம்ஸ் / டொனால்ட் டிரம்ப்

Updated On :26 மார்ச் 2025, 9:41 pm IST

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் உள்பட 4 பேரின் மீட்புப் பணிகள் அதிபர் டொனால்ட் டிரம்ப் இல்லாமல் சாத்தியமில்லை என நாசா புகழாரம் சூட்டியுள்ளது.

டிரம்ப் நிர்வாகத்துக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றிகளில் ஒன்று இது எனவும் நாசா சுட்டிக்காட்டியுள்ளது.

சா்வதேச விண்வெளி நிலையத்தில் 286 நாள்கள் தங்கியிருந்த நாசா விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ் உள்பட 4 விண்வெளி வீரா்களும் கடந்த 19ஆம் தேதி அதிகாலை 3.30 மணியளவில் (இந்திய நேரப்படி) பத்திரமாக பூமிக்குத் திரும்பினர்.

அமெரிக்காவின் போயிங் நிறுவனம் தயாரித்த ஸ்டாா்லைனா் விண்கலத்தில் நாசா விண்வெளி வீரா்களான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோா் ஆகிய இருவரும் கடந்த ஆண்டு ஜூன் 5-ம் தேதி சா்வதேச விண்வெளி நிலையத்துக்குச் சென்றனா்.

சா்வதேச விண்வெளி நிலையத்தில் 8 நாள்கள் ஆய்வை முடித்துவிட்டு இவா்கள் பூமி திரும்ப திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், ஸ்டாா்லைனா் விண்கலத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு, இவா்கள் பூமிக்கு உடனடியாகத் திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால், அவா்கள் தொடா்ந்து சா்வதேச விண்வெளி நிலையத்திலேயே தங்கியிருந்து, ஆய்வுகளை மேற்கொண்டனா்.

இந்த நிலையில், கடந்த 16-ஆம் தேதி அமெரிக்காவைச் சோ்ந்த விண்வெளி வீரா்கள் ஆனி மெக்லைன், நிகோல் அயா்ஸ், ஜப்பானைச் சோ்ந்த டகுயா ஒனிஷி, ரஷியாவைச் சோ்ந்த கிரீஸ் பெஸ்கோஸ் ஆகியோருடன் எலான் மஸ்கிற்குச் சொந்தமான ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலம் சா்வதேச விண்வெளி நிலையத்தைச் சென்றடைந்தது.

புதிய விண்வெளி வீரா்களிடம் பணிகளை ஒப்படைத்த பின்னா், அமெரிக்காவைச் சோ்ந்த சுனிதா வில்லியம்ஸ், வில்மோா், நிக் ஹேக் மற்றும் ரஷியாவைச் சோ்ந்த அலெக்ஸாண்டா் ஆகியோா் அங்கிருந்த டிராகன் விண்கலன் மூலம் பூமிக்குத் திரும்பினர்.

இந்நிலையில் இது குறித்து ஆங்கில ஊடகத்துக்கு பேட்டி அளித்த நாசாவின் செய்தித்தொடர்பாளர் பெத்தனி ஸ்டீவன்ஸ் தெரித்துள்ளதாவது,

''விண்வெளி வீரர்கள் பத்திரமாக மீட்கப்பட்டது டிரம்ப் நிர்வாகத்துக்கு கிடைத்த மிகப்வெற்றிகளில் ஒன்று. அதிபர் டிரம்ப் இல்லாமல் இது சாத்தியமில்லை. நாசாவின் அடுத்த நிர்வாகியாக பணியாற்ற ஜாரட் டெய்லர் ஐசக்மேனை அவர் தேர்வு செய்துள்ளார்.

அமெரிக்க மக்கள் ஒருகாலத்தில் அவரை வெளியேற்றினர். ஆனால், மீண்டும் டிரம்ப்பிற்கு அமெரிக்க மக்கள் பொறுப்புகளை வழங்கியுள்ளனர். தொழில் துறையில் அவர் எந்த அளவுக்கு கவனம் செலுத்துகிறார் என்பதை அவரின் நிர்வாகத்தின் மூலம் உணரலாம். தொழில்முனைவோரும் வணிக விண்வெளி வீரருமான ஜாரட் டெய்லரை அவர் பரிந்துரை செய்ததில் இருந்து அதனை அறியலாம்'' எனக் குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.