திரைத்துறையில் 51 ஆண்டுகளை நிறைவு செய்த ரஜினிகாந்த்!எடப்பாடி தொகுதி தவெக வேட்பாளர் அதிமுகவில் இணைந்தார்!திருவொற்றியூரில் பள்ளி மாணவா் கொலை: 12 பேர் கைதுதேவ்தத் படிக்கல் சதம், கே.எல்.ராகுல் அரைசதம்; முதல் நாளில் இந்திய அணி 288 ரன்கள் குவிப்பு!முதல்வர் விஜய் குறித்து அநாகரிகப் பேச்சு: நயினார் நாகேந்திரன் மீது டிஜிபியிடம் புகார்!பேரவையில் அப்பாவைத் தேடினால்...! முதல்வர் விஜய் குறித்து நயினார் அநாகரிகப் பேச்சு
/

இனி ஸ்டேட்டஸ்களில் பாடல் சேர்க்கலாம்! உற்சாகத்தில் வாட்ஸ்ஆப் பயனர்கள்!

இன்ஸ்டாகிராமைப்போல வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸ்களிலும் பாடல் சேர்க்கும் அம்சம் அறிமுகம்!

News image

ENS

Updated On :29 மார்ச் 2025, 12:02 pm IST

வாட்ஸ்ஆப்பில் ஸ்டேட்டஸ் பதிவேற்றும்போது, பாடலோ இசையோ சேர்த்து பதிவேற்றும் அம்சத்தை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

வாட்ஸ்ஆப்பின் அனைத்து பயனர்களுக்கும் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த புதிய வசதியை, பயனர்கள் பலரும் மிகுந்த மகிழ்ச்சியுடன் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இதுவரையில், மெட்டாவின் மற்றொரு செயலியான இன்ஸ்டாகிராமில் மட்டுமே பாடல் சேர்க்கும் அம்சம் இருந்தது. ஆனால், இன்ஸ்டாவில் நாம் பாடல் சேர்த்து எடிட் செய்யும் விடியோவை பதிவிறக்கம் செய்தால், இசையின்றியே பதிவிறக்கமாவதுபோல் இருந்தது. இசையுடன் பதிவிறக்கம் செய்ய வேண்டுமென்றால், மூன்றாம் நிலை செயலியைப் பயன்படுத்த வேண்டியிருந்தது.

இதனால், இன்ஸ்டாவில் எடிட் செய்து பதிவிறக்கம் செய்யும் விடியோவை வாட்ஸ்ஆப்பில் பகிர்வதில் சிறு சிரமம் இருந்ததாக வாட்ஸ் ஆப் பயனர்கள் கூறி வந்தனர்.

இந்த நிலையில், வாட்ஸ்ஆப்பிலும் இசை சேர்க்கும் அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பது வாட்ஸ்ஆப் பயனர்களிடையே அளவிலா ஆனந்தத்தை ஏற்படுத்தியிருப்பதாக சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். புகைப்படங்களில் 15 விநாடிகளும், விடியோக்களில் 60 விநாடிகளும் இசை அல்லது பாடலைச் சேர்க்கும்வகையில் இந்த புதிய அம்சம் வாட்ஸ்ஆப்பில் வழங்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.