பசிபிக் பெருங்கடலில் உள்ள டோங்கா தீவில் 7.1 ரிக்டர் அளவுகோளில் நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
டோங்கா தீவைச் சுற்றிலும் 100 கி.மீ. சுற்றளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், தற்போது சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் 300 கி.மீ. தொலைவுக்கு ராட்சத அலைகள் உருவாக வாய்ப்புள்ளதாகவும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
ஆஸ்திரேலியாவுக்குட்பட்ட பாலினேசியா துணைக் கண்டத்தில் கிட்டத்தட்ட ஆயிரத்துக்கும் அதிகமான தீவுகள் அமைந்துள்ளன. இதில் 177 சிறு தீவுகளை உள்ளடக்கியதாக டோங்கா உள்ளது.
பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள இந்தத் தீவின் வடகிழக்கே 100 கி.மீ. தொலைவில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோளில் 7.1 ஆகப் பதிவாகியுள்ளது. இத்தீவில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். குறிப்பாக டோங்காதபு தீவில் பெரும்பாலானோர் உள்ளனர்.
இந்நிலையில், டோங்கோ தீவைச் சுற்றிலும் 300 கி.மீ. தொலைவுக்கு சுனாமி ஏற்பட வாய்ப்புள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதையும் படிக்க | மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம்..!
இதையும் படிக்க | உலகளவில் சாட்ஜிபிடி சேவை பாதிப்பு! ஜிப்லி காரணமா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தஞ்சை மாவட்டத்தில் சி, டி பிரிவு வாய்க்கால்களில் 377 கி.மீ. தொலைவுக்கு தூா்வார இலக்கு

இலுப்பூரில் 5 கி.மீ. தொலைவுக்கு மாணவா்கள் சிலம்பம் சுற்றி சாதனை முயற்சி

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
விடியோக்கள்

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK

திருக்கணிதப்படி குருபெயர்ச்சி பலன்கள்! June 1 நள்ளிரவு 2 மணி முதல் | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்



