விஜய்யும் உதயநிதியும் மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும்: மு. வீரபாண்டியன்தவெக அமைச்சர் என். ஆனந்த் உடன் விஜயபாஸ்கர் சந்திப்புதமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவு
/

இஸ்ரேலின் கொடூரத்தால் ஆமைகளை உண்ணும் காஸா மக்கள்!

இஸ்ரேலின் தாக்குதலால் உணவின்றி தவிக்கும் காஸா

News image

இஸ்ரேல் தாக்குதலால் 4 வயது சிறுமி பலி - AP

Updated On :2 மே 2025, 4:52 pm IST

இஸ்ரேலின் தாக்குதலால் காஸாவில் பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்து வருகின்றனர்.

இஸ்ரேல் - பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஹமாஸ் படையினருக்கு இடையே கடந்த ஒன்றரை வருடமாக போர் நடைபெற்று வருகிறது. இப்போரில் காஸாவின் பெரும்பாலான பகுதிகள் சேதமடைந்துள்ளன. கட்டட இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கவோ, இடிபாடுகளை அகற்றி சரி செய்யவோ போதிய கனரக வாகனங்களின்றி காஸா நிர்வாகம் தவித்து வருகிறது.

இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக அமெரிக்கா, எகிப்து, கத்தார் நாடுகள் மேற்கொண்ட முயற்சியின் பலனாக, இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே கடந்த ஜன. 19 முதல் 6 வாரங்களுக்கு போர்நிறுத்தம் கடைப்பிடிக்கப்பட்டாலும், அது நீட்டிக்கப்படவில்லை.

Story image

AP

காஸாவில் தண்ணீர்த் தொட்டிகள், செல்போன் கோபுரங்கள் மட்டுமல்லாது, மக்கள் வசிக்கும் பகுதிகள், பள்ளிகளிலும்கூட இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.

மேலும், காஸாவுக்குள் செல்லும் நிவாரண உதவிகளையும் இஸ்ரேல் தடுத்து நிறுத்தி வருகிறது. இதனால், காஸாவில் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பச்சிளம் குழந்தைகள் முதல் பலரும் பலியாகி வருகின்றனர்.

இந்த நிலையில், உண்ண உணவின்றி தவிக்கும் காஸா மக்கள், கடற்கரையில் ஒதுங்கும் ஆமைகளை உண்பதாகத் தெரிவிக்கின்றனர். `இதுபோன்ற துரதிருஷ்டவசமான வாழ்வும் ஏற்படும் என்று கனவில்கூட நினைத்ததில்லை’ என்று பரிதாபம் தெரிவிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.