இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், லெபனானின் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையே புதிய அமைதி ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ள நிலையில், தெற்கு லெபனான் பகுதிகளைக் குறிவைத்து சனிக்கிழமை (ஜூன் 6) காலை இஸ்ரேலிய படைகள் தாக்குதல் நடத்தியுள்ளன.
மார்ஜாயூன் மாவட்டத்தின் நபாட்டியே நகரத்தின் மீதான இந்தத் தாக்குதலில், லெபனான் ராணுவத்தைச் சேர்ந்த 3 அதிகாரிகள் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், கொல்லப்பட்டவர்களின் விவரங்கள் வெளியிடப்படவில்லை.
இதேபோல், சாக்சாகியா கிராமத்தின் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், 4 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக, அரசு ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
சமீபத்தில், அமெரிக்கா தலைமையில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து லெபனான் மற்றும் இஸ்ரேல் இடையே போர்நிறுத்தம் அமலுக்குக் கொண்டுவரப்பட்டது. மேலும், இந்த அமைதி ஒப்பந்தத்தை எதிர்த்த ஈரானிய அரசுக்கு, லெபனான் அரசு கண்டனம் தெரிவித்திருந்தது.
முன்னதாக, ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களைத் தொடர்ந்து, கடந்த மார்ச் 2 ஆம் தேதி இஸ்ரேல் மீது லெபனான் தாக்குதல் நடத்தியது. இதையடுத்து, இருதரப்புக்கும் இடையே வெடித்த போரில், லெபனானில் 3,500 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Summary
It has been reported that nine people, including Lebanese military officers, were killed in an attack carried out by Israel.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டிரம்ப் பேச்சு நடத்திய மறுநாளே தெற்கு லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்!

லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 5 பேர் பலி! போர்நிறுத்தம் முறிவு?

லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்! இதுவரை 290 பெண்கள் உள்பட 2,198 பேர் பலி!

ஈரானின் போர்நிறுத்தம் இங்கு பொருந்தாது..! லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 182 பேர் பலி!
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



